செய்திகள் :

வெறிநாய் கடி; முற்றிய ரேபிஸ்... கோவை மருத்துவமனையில் கண்ணாடியால் கழுத்தை அறுத்து உயிரிழந்த தொழிலாளி

post image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமசந்தர் (வயது 28). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரை தெருநாய் கடித்துள்ளது. இதையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வெறிநாய்

மூர்க்கத்தனமாக...

ரேபிஸ் அறிகுறி இருந்த காரணத்தால் தனி வார்டில் அவருக்கு முதல்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து யாராலும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கினார்.

“மூச்சு விட சிரமமாக இருக்கிறது.” என்று மட்டும் கூறிய அவர், வலியில் கதறி துடித்து கொண்டிருந்தார். பிறகு வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்தார். கண்ணாடி துண்டுகளை எடுத்து தன்னை தானே தாக்கி கொண்டார். ரத்தம் சொட்ட.. சொட்ட.. மேற்கொண்டு செய்வதறியாமல் விழுந்து.. புரண்டு மீண்டும் மீண்டும் கண்ணாடி துண்டுகளால் தாக்கியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனை

மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாவலர்கள் யாராலும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியில் பரிதாபமாக அவர் உயிரும் பிரிந்துவிட்டது. இநத சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவமனை முதல்வர் சொல்வதென்ன?

இதுகுறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் நிர்மலா கூறுகையில், “ரேபிஸ் அறிகுறியுடன் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார். தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை வழங்கினோம். ஆனால் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால் அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார்.

கையில் உடைந்த கண்ணாடி துண்டுடன் ராமசந்தர்

வார்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து தன் கழுத்து மற்றும் உடல் பாகத்தில் தாக்கி கொண்டார். அவர் கையில் உடைந்த கண்ணாடியுடன் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததால் எங்களால் உடனடியாக செல்ல முடியவில்லை.

இந்த சம்பவத்தின்போது பெண் மருத்துவர் தான் பணியில் இருந்தார். உரிய பாதுகாப்புடன் அருகில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை. அதனால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்களும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரை மீட்டனர். அதன் பிறகு அவருக்கு சிகிச்சை அளித்தோம்.

உடைக்கப்பட்ட ஜன்னல்

ஆனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசடைந்தது. ஒருகட்டத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரை மயக்க நிலைக்கு கொண்டு சென்று சிகிச்சை கொடுக்க நினைத்த எங்கள் முயற்சியும் செயல்படுத்த முடியவில்லை.” என்றார்.

அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ராமசந்தர் உடன் மருத்துவமனைக்கு யாரும் வரவில்லை. உயிரிழந்த பிறகு தான் அவரின் உறவினர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை ராமசந்தர் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

அதன்பிறகு தான் முழு விபரம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனிடையே ராமசந்தர் தன்னை தானே தாக்கி உயிருக்கு போராடும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், ரேபிஸ் நோயால் ஒருவர் தன்னை தானே தாக்கி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: அதென்ன 'ஐ பிரஷர்..' பார்வையைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா அது?

Doctor Vikatan: என்நண்பனுக்கு 55 வயதாகிறது. சமீபத்தில் கண்டெஸ்ட்டுக்கு போனபோது, மருத்துவர் அவனுக்குகண்களில் பிரஷர் அதிகமாக உள்ளதாகவும், அதைஇப்போதே பார்த்து சரிசெய்யாவிட்டால், பார்வையே பறிபோகலாம் என்று... மேலும் பார்க்க

Muskmelon: முலாம் பழம் குளிர்ச்சி தரும்; குடல் புழுக்களைக் கொல்லும்; அல்சரை குணப்படுத்தும்!

வெயில் காலத்தில் தர்பூசணிக்கு அடுத்து எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவது முலாம் பழங்களைத்தான். இதை நறுக்கியதும் நாசியைத் துளைக்கும் மணமும் பளீர் ஆரஞ்சு நிறமுமே ஈர்க்கும். முலாம் பழத்தின் சத்துக்கள், சிற... மேலும் பார்க்க

பிரியாணி சாப்பிட்ட பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு; 8 மணி நேரம் போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்

மும்பை குர்லாவைச் சேர்ந்த ரூபி ஷேக் (34) என்ற பெண் தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கன் பிரியாணியை குடும்பத்தினருடன் அமர்ந்து ஆசையாக சாப்பிட்டார். அவர் பிரியாணியை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அதில் இரு... மேலும் பார்க்க

Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்!

வெயில் காலம் சீக்கிரமே ஆரம்பித்துவிட்டது. அதனால், கூழ் வியாபாரமும் களைகட்டி விட்டது. இந்தக் கூழில் அப்படி என்னதான் ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன..? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அர... மேலும் பார்க்க

Obesity guidance: எவ்ளோ நடந்தாலும் உடல் எடை குறையலையா? அப்ப இதுதான் காரணம்!

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்போர் பெரும்பாலும் செய்வது நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும். அரை மணி நேரம் ஏதோ கடமைக்கு நடந்துவிட்டு உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுவோர் எண்ணிக்கைதான் ... மேலும் பார்க்க

Heart Health: மாரடைப்புக்கும் சிரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது... மருத்துவர் சொல்வதென்ன?

'இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில், இதுபற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய நோய் வந்தால், அலட்சியமாகவும் அசட்டையாகவும் இர... மேலும் பார்க்க