செய்திகள் :

Health: வெயில் காலத்தில் ஏன் கூழ் குடிக்க வேண்டும்? - முக்கியத்துவத்தை விளக்கும் மருத்துவர்!

post image

வெயில் காலம் சீக்கிரமே ஆரம்பித்துவிட்டது. அதனால், கூழ் வியாபாரமும் களைகட்டி விட்டது. இந்தக் கூழில் அப்படி என்னதான் ஆரோக்கிய பலன்கள் இருக்கின்றன..? விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் அரீஷ்குமார்.

''தமிழர்களின் பாரம்பர்ய உணவுகளில் சிறுதானியங்களுக்கு முக்கியமான இடம் உண்டு. அதில் கேழ்வரகுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வெயில் காலத்தில் நம் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இதனால், உடல் வறட்சி, செரிமானக்கோளாறுகள் ஏற்படலாம். இக்காலத்தில் திட உணவைவிட திரவ உணவே உகந்தது என்பதை அறிந்து கேழ்வரகை கூழாகப் பருகினார்கள் நம் முன்னோர்கள். முந்தைய நாள் கரைத்துப் புளிக்க வைத்த ராகி மாவை அடுப்பில் வேகவிட்டு, பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து, மோர், சின்ன வெங்காயம் சேர்த்துப் பருகினால், அக்கூழ் மருந்தாகவே மாற்றமடைகிறது.

கூழ்

உடல் ஆற்றலையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கூழ் அதிகரிக்கும். உடலில் கொலஸ்ட்ரால் அளவையும், உடல் எடையையும் குறைக்க உதவும். கூழ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல. கடும் உடலுழைப்பு செய்வோரின் ஆற்றல் குறையாமல் இருக்க இது உதவியாக இருக்கும்.

இந்த மாவை அப்படியே உபயோகித்தால் வயிற்றுக்கோளாறு, சரும பிரச்னை போன்றவை வரும். எனவேதான் அதைப் புளிக்க வைத்து உபயோகப்படுத்துகிறோம். வெயில் காலத்தில் வாதம் அதிகரிக்கும். இது அதிகரித்தால் இனிப்பு, புளிப்பு, உப்பு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சித்தர்கள் கூறியுள்ளனர். அதனாலேயே கூழைப் புளிக்க வைத்து உப்பு சேர்த்து வாதத்தைத் தணிக்கும் உணவாக மாற்றி உள்ளனர். கூழிலில் சேர்க்கப்படும் மோர், சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.

கேப்பைக் கூழ்

இதில் காணப்படும் பாலிபினால் (poly phenol) நோய் வருவதற்கு காரணமான ஃப்ரீ ரேடிகல்ஸை (free radicals) தடுக்கிறது. மேலும் புற்றுநோய் வராமல் காத்துக் கொள்வதற்கும் (reduce oxidative stress) உதவுகிறது. இதிலுள்ள நன்மை பயக்கும் நுண்ணுயிரிகள் (probiotics ) நம் உடலை வலுப்பெறச் செய்து செரிமான கோளாறைப் போக்கி உடலைக் காக்கின்றன. அதனால், இந்த வெயில் காலத்தில் உங்கள் உணவில் கூழ் கட்டாயம் இருக்கட்டும்'' என்கிறார் மருத்துவர் அரீஷ்குமார்.

Obesity guidance: எவ்ளோ நடந்தாலும் உடல் எடை குறையலையா? அப்ப இதுதான் காரணம்!

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்போர் பெரும்பாலும் செய்வது நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும். அரை மணி நேரம் ஏதோ கடமைக்கு நடந்துவிட்டு உடல் எடை குறையவில்லை என்று வருத்தப்படுவோர் எண்ணிக்கைதான் ... மேலும் பார்க்க

Heart Health: மாரடைப்புக்கும் சிரிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது... மருத்துவர் சொல்வதென்ன?

'இதய நோய்களின் தலைநகரம் இந்தியா’ என்று வர்ணிக்கப்படும் நம் நாட்டில், இதுபற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ இன்னும் முழுமையாக இல்லை. நம் உறவினர்களுக்கே கூட இதய நோய் வந்தால், அலட்சியமாகவும் அசட்டையாகவும் இர... மேலும் பார்க்க

Salt: `தினசரி சாப்பிடும் உப்பால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் இறப்புகள்..!' - WHO அதிர்ச்சி தகவல்!

அதிகப்படியான உப்பு உட்கொள்வதால் ஆண்டுதோறும் 1.9 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாக WHO தெரிவித்துள்ளது. சோடியம் நிறைந்த நுகர்வுகளை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உப்புக்கு மாற உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்க... மேலும் பார்க்க

Eye Health: கூலர்ஸ்... ஸ்டைலுக்கா? கண்களைப் பாதுகாக்கவா? - மருத்துவரின் தெளிவான விளக்கம்

''சில நாட்களுக்கு முன்பு, 'கண் நல்லாதான் இருக்கு... சும்மா ஒரு டெஸ்ட் செஞ்சுக்கலாமேனு வந்தேன்’ என்று ஒருவர் வந்தார். அவரைப் பரிசோதித்ததில், அதிர்ச்சி. அவரின் கண் நரம்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிர... மேலும் பார்க்க

Doctor Vikatan: திட்டமிடாமல் உருவாகிவிட்ட கர்ப்பம்... அபார்ஷன் மாத்திரை பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என்வயது 38. தாம்பத்திய உறவின்போது பெரும்பாலும் கவனமாகவே இருப்பேன். ஆனால், இந்த முறை ஏதோ அலட்சியத்தில், கரு தங்கிவிட்டது. ஏற்கெனவேஇரண்டு குழந்தைகள் இருப்பதால், இந்த வயதில் இன்னொரு குழந்... மேலும் பார்க்க

Valentine's Day: 'ஒரு முத்தத்தில் 12 கலோரிகள்...' - முத்தம் கொடுப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

நம் தினசரி அலைச்சல், உளைச்சல்களிலிருந்து விடுதலை கொடுத்து அன்பின் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாயில்தான் முத்தம். முத்தம் கொடுக்கவும் பெறவும் இனம், பாலினம், வயது என எந்த வரம்புகளும் இல்லை. வாழ்வ... மேலும் பார்க்க