செய்திகள் :

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

post image

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.

பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார். இதற்கான, அழைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டில் முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர் இந்த மாதம் (மார்ச்) அங்கு சென்று உரையாற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வெளியான தகவலில் முதல்வர் மமதா வருகின்ற மார்ச் 21 அன்று விமானம் மூலமாக கொல்கத்தாவிலிருந்து துபைக்கு சென்று அங்கிருந்து லண்டன் நகரத்துக்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அவரது சொற்பொழிவின் தலைப்பு குறித்த தகவல்கள் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.

இதையும் படிக்க: இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இதனைத் தொடர்ந்து, அவர் பிரிட்டனில் மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய விரும்பும் அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்ற முதல்வர் மமதாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சியானது மத்திய அரசின் ரகசிய முயற்சியால் ரத்து செய்யப்பட்டதாக அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க

28 சிறுமிகள் உள்பட மாயமான 39 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

புது தில்லியில் கடந்த 2 மாதங்களில் காணாமல்போன 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு தில்லி மாவட்டத்தின் ரோஹினி நகரத்தில் கடந்த ஜனவரி 1 முதல் பிப்ர... மேலும் பார்க்க