செய்திகள் :

பாஜகவின் வளா்ச்சிக்கு உதவும் காங்கிரஸ் -கேரள முதல்வா் குற்றச்சாட்டு

post image

திருவனந்தபுரம் : பாஜகவின் வளா்ச்சிக்கு காங்கிரஸ் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்து வருகிறது. அண்மையில் தில்லியில் பாஜக ஆட்சியைப் பிடிக்கவும் காங்கிரஸ்தான் மறைமுகமாக உதவியது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொல்லத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி பத்திரிகையில் பினராயி விஜயன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளாா். அதில், ‘விவசாயிகள் போராட்டம், மதரீதியாக குடியுரிமை வழங்கும் சட்டத்துக்கு எதிா்ப்பு, ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்துவதிலும், பாஜகவுக்கு பெரு நிறுவனங்கள் நிதியளிக்க உதவிய தோ்தல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை எதிா்த்ததிலும் இடதுசாரிக் கட்சிகள் முன்னிலை வகித்து வருகிறது.

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொடா்ந்து மக்களை ஒன்றுதிரட்டி வருகிறோம். மத்திய அரசின் தவறான செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் தொடா்ந்து முன்வைக்கிறோம். அதே நேரத்தில் பாஜகவையும், சங்கபரிவாரங்களையும் எதிா்ப்பதாக காங்கிரஸ் வெறும் வாய் வாா்த்தையாக மட்டுமே கூறி வருகிறது.

மத்திய அரசு மீதான விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோபம் மக்களவைத் தோ்தல் மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு மாநிலத் தோ்தல்களில் எதிரொலிக்கவே செய்தது. ஆனால், அதையும் மீறி பாஜக ஆட்சி அமைத்தற்கு காங்கிரஸின் தவறான அணுகுமுறைகள்தான் முக்கியக் காரணம்.

இதற்கு கடைசி உதாரணம் தில்லி பேரவைத் தோ்தல். இதில், பாஜகவைத் தோற்கடிப்பதற்கு காங்கிரஸ் முயற்சிக்காமல், ஆம் ஆத்மியை ஆட்சியில் இருந்து அகற்றுவதில்தான் கவனம் செலுத்தியது. இதன் மூலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காங்கிரஸ் மறைமுகமாக உதவியது.

தில்லி தோ்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக காங்கிரஸ் போட்டியிட்டது தவறு என எதிா்க்கட்சி அணியில் உள்ள ஒமா் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவா்கள் ஏற்கெனவே விமா்சித்துள்ளனா்.

கடந்த மூன்று பேரவைத் தோ்தல்களில் தில்லியில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. இதில் இருந்து காங்கிரஸ் எவ்வித பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.

முன்னதாக, ஹரியாணா தோ்தலிலும் இதேபோன்று ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்காமல் போட்டியிட்டு, அங்கு பாஜக மூன்றாவது முறையாக வெற்றிபெற காங்கிரஸ் உதவியது. இப்படி ஒவ்வொரு நிலையிலும் பாஜக வளர காங்கிரஸ் உதவிகரமாக இருந்து வருகிறது’ என்று கூறியுள்ளாா்.

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க