செய்திகள் :

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

post image

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமானது ‘மாதவ் புலிகள் காப்பகம்’ எனும் பெயரில் விரைவில் திறக்கப்படவுள்ளதாகவும், இதன்மூலம் ’புலிகளின் மாநிலம்’ எனும் பெருமையை தக்கவைப்பதுடன் புதிய சாதனைகளை நோக்கி நகர்வதாக முதல்வர் மோகன் யாதவ் இன்று (மார்ச் 5) கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, புலிகள் காப்பகத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்படும் விடுதிகள், ரிசார்ட்டுகள் அனைத்தும் சுற்றுலாக் காலம் முழுவதும் மக்களால் நிறைந்திருப்பதாகவும்; இது மத்தியப் பிரதேசத்தின் மீதான சுற்றுலாப் பயணிகளின் அன்பையும், அம்மாநிலத்தின் காடுகளின் வளமையையும் உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இந்திய பில்லியனர்களின் மொத்த நிகர மதிப்பு 950 பில்லியன் டாலர்!

இந்நிலையில், புதிய மாதவ் புலிகள் சரணாலயம் மற்றும் வனவிலங்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சம்பல் பகுதியில் மாநில அரசு ஒரு புதிய சுற்றுலாப் பகுதியை உருவாக்கும் என்றும் இதனால் அப்பகுதியின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் யாதவ் கூறியதாவது: ஒருபுறம், ஆசியாவில் நமது சம்பல் பகுதியில் சிறுத்தைகள் மீண்டும் சுற்றித் திரிவதைக் காணலாம். மேலும், சம்பல் ஆற்றில் டால்பின் கரியல் திட்டத்திற்கான பணிகளும் அதேப் பகுதியில் நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்துடன், அந்தப் பகுதியில் கழுகுகள் நிறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் விரைவில் அங்கு இரண்டு புலிகளை விடுவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

சென்னை: சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடை பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: மாா்ச் 10 ஆம் தேதி உள்ளூா் விடுமுறை

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி மாா்ச் 10 ஆம் தேதி திங்கள்கிழமை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கி ... மேலும் பார்க்க

சாணாரப்பட்டி: மர்ம விலங்கு கடித்து 5 ஆடுகள் பலி

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள சாணாரப்பட்டியில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்ததில் 5 ஆடுகள் பலியாகின. மேட்டூர் நங்கவள்ளி அருகே சாணார்பட்டி கிராம் கூலிக்காடு பகுதிய... மேலும் பார்க்க

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க