செய்திகள் :

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

post image

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு பிற நாடுகள் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அவர்கள் விதிக்கும் இணையான வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில், கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா இணைக்கப்படும் என்று தொடர்ந்து டிரம்ப் தெரிவித்து வருகிறார்.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

இதையும் படிக்க : தூத்துக்குடி தாய், மகள் கொலை: ட்ரோன் உதவியுடன் தேடப்பட்ட குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்களின் உரையாடல் குறித்து டிரம்ப் தெரிவித்ததாவது:

“கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் என்னை தொடர்புகொண்டு வரி உயர்வு குறித்து தொலைபேசியில் உரையாடினார். கனடா மற்றும் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் வந்த போதைப் பொருள்களால் பலர் உயிரிழந்ததை அவரிடம் சொன்னேன். தற்போது போதைப் பொருள் ஊடுருவல் நிறுத்தப்பட்டதாக அவர் கூறியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பிரதமர் தேர்தல் எப்போது நடைபெறவுள்ளது என்பதை அவரால் என்னிடம் கூறமுடியவில்லை. கனடாவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற ஆர்வத்தை எனக்குள் தூண்டியது. அதன்பிறகுதான் வர்த்தகப் போரை பதவியில் நீடிக்க பயன்படுத்த விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன்” எனப் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், கனடா ஆளுநர் ஜஸ்டின் எனக் குறிப்பிட்டு, அவரது பலவீனமான எல்லைக் கொள்கையால் அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோதமாக மக்கள் ஊடுருவல்தான் பெரும்பாலான பிரச்னைக்கு காரணம் என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமரை தொடர்ந்து ஆளுநர் என்று டிரம்ப் அழைத்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கும் அபாயம்!

ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 67 வயதான பெண் செவிலியரை நோயாளி ஒருவா் சராமாரியாக தாக்கியுள்ளாா். இதனால், கண்பாா்வையை இழக்கும் அபாயத்த... மேலும் பார்க்க