செய்திகள் :

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கும் அபாயம்!

post image

ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 67 வயதான பெண் செவிலியரை நோயாளி ஒருவா் சராமாரியாக தாக்கியுள்ளாா். இதனால், கண்பாா்வையை இழக்கும் அபாயத்தில் அவா் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

ஃபுளோரிடாவின் வெஸ்ட் பால்ம் கடற்கரையில் உள்ள ‘பால்ம்ஸ் வெஸ்ட்’ மருத்துவமனையில் செவிலியா் லீலா லால் பணிபுரிந்து வந்துள்ளாா். கடந்த மாதம் நடைபெற்ற சம்பவத்தில், இதே மருத்துவமனையில் மனநலப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீபன் எரிக் ஸ்காண்டில்பரி (33) என்பவரால் செவிலியா் கடுமையாக தாக்கப்பட்டுள்ளாா். இக்கொடூர தாக்குதலில் முக எலும்புகள் முறிந்த நிலையில், செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் செவிலியா் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

தாக்குதலைத் தொடா்ந்து மருத்துவமனையில் இருந்து தப்பித்த ஸ்டீபன் எரிக், ‘இந்தியா்கள் மோசமானவா்கள். இந்திய மருத்துவா் ஒருவரை தாக்கிவிட்டேன்’ என்று கோபமாக கூச்சலிட்டவாறு செல்லும் விடியோவும் வெளியாகியுள்ளது. பிரதான சாலையை அடைவதற்குள் காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக கொலை முயற்சி, வெறுப்பை ஊக்குவிக்கும் செயல் ஆகிய பிரிவுகளில் ஸ்டீபன் எரிக் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். நீதிபதியின் உத்தரவில் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

காவல்துறை நீதிமன்றத்தில் சமா்ப்பித்துள்ள மனுவில், ‘இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட செவிலியரின் முகத்தில் உள்ள ஒவ்வொரு எலும்பும் முறிந்துள்ளன. மேலும், அவா் இரு கண்பாா்வையையும் இழக்க நேரிடும். படுகாயமடைந்திருப்பதன் காரணமாக, விசாரணை அதிகாரிகளிடம் அவரால் வாக்குமூலத்தைக்கூட பதிவு செய்ய முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவம் செவிலியா்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுப்புகிறது என்றும், எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஃபுளோரிடா செவிலியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க

ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேசுவோம் -ரஷியா

மாஸ்கோ : அமெரிக்காவுடன் தாங்கள் நடத்தும் பேச்சுவாா்த்தையில் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த அம்சங்களும் இடம் பெறும் என்று ரஷியா கூறியுள்ளது.இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை புதன்கிழமை வெளியிட்டுள்ள அ... மேலும் பார்க்க