செய்திகள் :

பள்ளி பேருந்தில் பாலியல் கொடுமை... 5 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி; கிளீனர் கைது..

post image

செங்கல்பட்டு பாலூரில் உள்ள தனியார் ஆரம்ப பள்ளியின் பேருந்தில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு நடந்துள்ளது.

பாலூரில் உள்ள அந்தத் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் பஸ் வசதியும் உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்ததும் வழக்கம்போல, பஸ் மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கிவிட சென்றிருக்கிறது. கிட்டதட்ட அனைத்து மாணவர்களையும் இறக்கிவிட்ட பிறகு, 5 வயது சிறுமி மட்டும் பஸ்ஸில் இருந்துள்ளார். இவர் குறிப்பிட்ட அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார்.

சிறுமி மருத்துவமனையில் அனுமதி!

இவருக்கு அந்தப் பஸ்ஸின் கிளீனர் முருகன் பாலியல் தொந்தரவு தந்துள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்தது என்ன என்று தெரியாமல் தனக்கு வலிக்கிறது என்றும், கிளீனர் செய்த விஷயங்களை பற்றியும் பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார்.

சிறுமியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்த அவரது பெற்றோர், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் 50 வயதான முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`அரிய வகை விலங்கு இது' - கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து இன்ஸ்டாவில் `ரீல்ஸ்' - சிக்கிய இருவர்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் வனசரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கீரிப்பிள்ளையை வேட்டையாடிச் சமைத்து `அரிய வகை விலங்கு' என இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 2 நபர்களுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்து எச்சரித்து... மேலும் பார்க்க

கரூர்: தொழிலதிபரிடம் ரூ.16 கோடி மோசடி; டிட்கோ அலுவலரைக் கைதுசெய்த போலீஸ்!

சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக (டிட்கோ) வருவாய் அலுவலரகப் பணியாற்றுபவர் சூர்யபிரகாஷ். அதற்கு முன்பு இவர், சென்னை மாநகர அம்மா உணவகத்தின் இயக்குநர் பொறுப்பிலும் கடந்த சில ஆண்டுகளாகப் பதவி வகித... மேலும் பார்க்க

தேனி: ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை ஏமாற்றி, டூவிலரை அடகு வைத்த நபர் கைது.. என்ன நடந்தது?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜேஸ். இவரின் மனைவி ஜெயலட்சுமி (38) சொந்த பிரச்னை காரணமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவந்துள்ளார். மனு எழுதுவதற்காக கலெ... மேலும் பார்க்க

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து, தற்கொலை நாடகமாடிய கணவன்... விருதுநகர் அருகே நடந்த கொடூரம்

வெம்பக்கோட்டை அருகே கணவன் மனைவி இடையேயான குடும்ப சண்டையில் மனைவியை கொன்று உடலை தீ வைத்து எரித்த கணவனை போலீஸார் கைது செய்தனர்.இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேச... மேலும் பார்க்க

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அ... மேலும் பார்க்க