செய்திகள் :

லண்டனிலிருந்து கொரியரில் போதைப்பொருள் கடத்திய கும்பல்; சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்கள்

post image

உலகம் முழுவதும் இருந்து போதைப்பொருள் மும்பைக்குப் பல்வேறு வடிவங்களில் கடத்தி வரப்படுகிறது. அதிகமான நேரங்களில் சிறிய அளவில் கொரியர் மூலம் கடத்தி வரப்படுகிறது. சில நேரங்களில் போதைப்பொருளை மாத்திரையில் அடைத்து அதனை வயிற்றுக்குள் மறைத்து வைத்தும் எடுத்து வருகின்றனர். அது போன்று கொரியர் மூலம் போதைப்பொருளை வெளிநாட்டிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்த மும்பையைச் சேர்ந்த ஒரு கும்பல் பிடிபட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கு இடமான ஒரு கொரியரை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் நவிமும்பையில் ரெய்டு நடத்தியதில், 11.54 கிலோ கொகைன், 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப்பொருள்

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 200 கோடியாகும். இவ்விவகாரம் தொடர்பாக ஹவாலா வியாபாரி எச்.பட்டேல், வியாபாரி மானே உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் நன்றாகப் படித்தவர்கள் ஆவர். இதில் எச்.பட்டேலும், மானேயும் வெளிநாட்டிலிருந்து வரும் போதைப்பொருளை வாங்கி உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதில் 80 முதல் 90 கிலோ கோகைன், 60 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போன்றவற்றைக் கடத்திக்கொண்டு வந்து விற்பனை செய்திருப்பதாக அவர்களிடம் விசாரித்ததில் தெரிய வந்தது.

ஒரு கிலோ கோகன் ரூ.10 கோடி முதல் 15 கோடிக்குச் சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. கஞ்சா மூலம் 90 லட்சத்திற்கு வியாபாரம் செய்துள்ளனர். அவர்கள் இரண்டு ஆண்டில் மொத்தம் 1,128 கோடி அளவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வந்து விற்பனை செய்துள்ளனர். போதைப்பொருளை வாங்குவதற்குத் தேவையான பணத்தை ஹவாலா முறையில் கொடுத்திருக்கின்றனர். அவர்கள் போதைப்பொருளைச் சிறிய அளவில் கப்பல் அல்லது கொரியர் மூலம் அமெரிக்காவிலிருந்து வரவைத்துள்ளனர்.

மும்பை கும்பலை லண்டனைச் சேர்ந்த நவீன் என்பவன் இயக்கி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் லண்டனைச் சேர்ந்த நவீன் மிகவும் நன்றாகப் படித்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர். நவீன் லண்டன் திரைப்படக்கல்லூரியில் படித்தவர் ஆவார். அதோடு கிரிமினல் சைகாலஜி பிரிவிலும் பட்டம் பெற்று இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேர் வெளிநாட்டில் படித்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மிகவும் நன்றாகப் படித்தவர்கள் ஒன்று சேர்ந்து இப்போதைப்பொருளை யாருக்கும் தெரியாமல் விற்பனை செய்து வந்துள்ளனர். நவீன் அமெரிக்காவிலிருந்து போதைப்பொருளை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பார்.

அவற்றை பட்டேலும், மானேயும் வாங்கி இந்தியாவில் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதோடு, இந்தியாவிலிருந்து வேறு வெளிநாடுகளுக்கும் அனுப்பி வந்தனர். கொரியர் மூலம் சிறிய அளவில் கடத்தி வரப்பட்டதால் வெளியில் தெரியாமல் இருந்தது. தற்போது நவீன் லண்டனில் தலைமறைவாகிவிட்டார். அவனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் போதைப்பொருள் வர்த்தகத்தை போலீஸார் கண்டுபிடித்து இருப்பதை மத்திய அமைச்சர் அமித் ஷா வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சென்னை: பேராசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு... போலீஸில் சிக்கிய மாணவி!

சென்னை, அசோக்நகர், 19-வது அவென்யூ பகுதியில் வசித்து வருபவர் கலாவதி (74). இவர், கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் கணவர் மணி. உடல்நலம் பாதிக்கப்பட்ட மணியை கவனித்துக் கொள்ள விழுப... மேலும் பார்க்க

வேலூர்: ``NSG கமாண்டோக்கள் ஒத்திகை பயிற்சி... தவறாக பகிரக் கூடாது'' - எச்சரிக்கும் காவல்துறை

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்துக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கி ஆயுதங்களை ஏந்திக்கொண்டு காரில் உள்ளே சென்று... திடீர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவதைப் போன்ற தவறான தகவல்களை சிலர் பதி... மேலும் பார்க்க

குழந்தை பிரசவித்த ஆதரவற்ற சிறுமி; உறவினர் உட்பட 2 பேர் போக்சோவில் கைது - குடியாத்தம் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஆதரவற்ற 16 வயது சிறுமி அவர். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியின் தந்தை இறந்துவிட்டார். மனவளர்ச்சிக் குன்றிய அவரின் தாயும் நாளடைவில் மாயமாகிவிட்டார்.இதனால்... மேலும் பார்க்க

உ.பி இளம்பெண் கொலை: மொட்டைபோட்டு கங்கையில் நீராடல்; கேரளாவுக்கு தப்ப முயன்றபோது சிக்கிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்பூரில் மருத்துவமனை ஒன்றிற்கு அருகில் இருந்த புதரில் டிராலி பேக் ஒன்று கிடந்தது. இது குறித்து போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்த பேக்கை பறிமுதல் செய்து த... மேலும் பார்க்க

கோவை: மனைவியை சுட்டுக் கொன்று, தற்கொலை செய்த கணவர் - பின்னணி என்ன?

கோவை அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று, கணவரும் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம்புதூர் என்கிற பகுதியில் கிருஷ்ணகுமார் - சங... மேலும் பார்க்க

புல்லட் திருட்டில் ஸ்பெஷலிஸ்ட்; 9 புல்லட்கள் பறிமுதல்; 2 திருடர்கள் சிக்கியது எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டூவிலர் திருட்டு அதிகமாக நடப்பதாகத் தொடர்ச்சியான புகார்கள் வரத் தொடங்கின. இதனால் மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் டூவிலர் திருட்டு வ... மேலும் பார்க்க