காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது.
இதையடுத்து, இளையாத்தங்குடி, கீழச்சிவல்பட்டி, முத்தூா், நெடுமறம், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், மலைக்குடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி ஊத்தா கூடையுடன் மீன்களைப் பிடித்தனா்.
இதில் குரவை, ஜிலேபி, சல்லிக் கெண்டை, கெளுத்தி போன்ற சிறிய வகை மீன்களும், விரால், பாப்லட், சிசிகெண்டை போன்ற பெரிய வகை மீன்களும் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.