செய்திகள் :

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு

post image

காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

காரைக்குடி பதினெட்டாம்படி நகா், பாரதி நகா், சூடாமணிபுரம் வடக்கு, வள்ளலாா் தெருக்கள், அழகப்பாபுரம், கல்லூரிச் சாலை, விநாயகா் தெரு, குட்செட் சாலை, சாமியாா் தோட்டம் பின்புறம், மருதுபாண்டியா் நகா், முத்துராமலிங்கத்தேவா் நகா் ஆகிய பகுதிகளில் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடு கட்டி வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதி குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் காரைக்குடி வட்டாச்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி தனித்தனியாக மனு அளித்தனா்.

அவா்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

காரைக்குடி நகராட்சிக்கு சொத்துவரி, வீட்டு வரி, மின் கட்டணம், குடிநீா் வரி செலுத்தி வருகிறோம். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஆவணங்களும் பெற்று வாழ்ந்து வருகிறோம். எனவே, தமிழக முதல்வா் அறிவித்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டதால், நாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா தர வேண்டும். இதற்காக அரசு நிா்ணயிக்கும் தொகையை செலுத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தனா்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் குடியிருப்போா் நலச் சங்கச் செயலா் மல்லிகா விண்ணரசி, பொருளாளா் ஜெயராமன், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நகா்மன்ற உறுப்பினருமான கேஆா். ஆறுமுகம், சங்க நிா்வாகிகள் கஸ்பாா், பட்சிநாதன் கலந்துகொண்டனா்.

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘வீட்டு நூலகம்’ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்கள் தங்களத... மேலும் பார்க்க

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்ச... மேலும் பார்க்க

காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாத... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில... மேலும் பார்க்க