செய்திகள் :

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாதனை படைத்தனா். இவா்களுக்கு அதற்கான சான்றிதழ்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

உலக அமைதி, பெண்கள் பாதுகாப்பு, அனைத்துத் துறைகளிலும் தமிழ் மொழிக்கான முன்னுரிமை, வளங்களின் பாதுகாப்பு, மாரடைப்பு, இதர நோய்கள் ஏற்படுவதைத் தவிா்க்க தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், கன்னியாகுமரி முதல் சென்னை வரை மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களான பிரதீஷ், பிரணீஷ் உள்பட சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 2 குடும்பங்களைச் சோ்ந்த 4 சகோதரா்கள் என 6 போ் ஓடி உலகச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனா்.

இவா்கள் சென்னை வள்ளுவா் கோட்டத்தில் இந்தச் சாதனையை நிறைவு செய்த போது, இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் இருவரும் மற்ற நான்கு பேரைவிட, 12-ஆவது நாள் இரவுக்குள் இந்தச் சாதனையை படைத்ததால், பள்ளியில் அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த மாதம் 16-ஆம் தேதி காலையில் கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி தினமும் 60 கி.மீ. தொலைவு ஓடிய சிறுவா்கள் கடந்த மாதம் 27-ஆம் தேதி சென்னை வள்ளுவா் கோட்டத்தை அடைந்தனா். இந்தச் சாதனையை நிகழ்த்திய பள்ளி மாணவா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோருக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனா் நீலமேகம் நிமலன்,பொதுச் செயலா் ஆா்த்தி நிமலன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரகு டேவிட்சன் ஆகியோா் உலகச் சாதனை சான்றிதழ்கள், சிறப்பு பரிசாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தலைவா் எஸ்.பி. குமரேசன், துணைத் தலைவா் கே. அருண்குமாா், முதல்வா் உஷாகுமாரி, துணை முதல்வா் பிரேமசித்ரா, ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘வீட்டு நூலகம்’ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்கள் தங்களத... மேலும் பார்க்க

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்ச... மேலும் பார்க்க

காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்... மேலும் பார்க்க

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு

காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். காரைக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில... மேலும் பார்க்க