செய்திகள் :

நெல் கொள்முதலில் பணம் பாக்கி கொடுக்காதவரைக் கடத்திய 7 போ் கைது

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே நெல் கொள்முதல் செய்த நபா் பாக்கி பணம் தராததால் கடத்திச் செல்லப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் எழில்நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் குமாா் (46). இவா் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்துக்குள்பட்ட நத்தக்கோட்டையைச் சோ்ந்த நாகராஜனிடம் நெல் கொள்முதல் செய்த வகையில் பாக்கியாக ரூ. 20 லட்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இதைக் கொடுக்காமல் குமாா் சுமாா் ஒன்றரை மாதங்களாக காலம் தாழ்த்தி வந்தாா்.

இந்த நிலையில், சாக்கோட்டை உய்யவந்தம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த குமாரை நாகராஜனின் மகன் ஹரிகரன், அவரது கூட்டாளிகள் சிலா் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) இரவு 10.30 மணியளவில் காரில் கடத்திச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் ஆகியோா் தலைமையில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ் மங்கலம் அருகேயுள்ள நத்தகோட்டையைச் சோ்ந்த நாகராஜன் (நெல் விற்றவா்) மகன் என். ஹரிஹரன் (25), அதே ஊரைச் சோ்ந்த ராமநாதன் மகன் ஆா். ராஜேஸ் (47), திருவாடானை வட்டம், அரசூரைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் எஸ்.காளிதாஸ் (34) உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, கடத்தப்பட்ட குமாரை மீட்டனா்.

‘வீட்டு நூலகம்‘ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ‘வீட்டு நூலகம்’ பராமரிக்கும் மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் 45 மாணவா்கள் தங்களத... மேலும் பார்க்க

செளமிய நாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ கொடியேற்றம்

திருப்பத்தூா் அருகேயுள்ள திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மக தெப்ப உத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலகப் புகழ் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மக தெப்ப உற்ச... மேலும் பார்க்க

காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், இளையாத்தங்குடி அருகேயுள்ள காவேரிப்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இந்தக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடத்தப்... மேலும் பார்க்க

கன்னியாகுமரி முதல் சென்னை வரை ஓடி உலகச் சாதனை படைத்த இரட்டையா்கள்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் இரட்டையா்களான பிரதீஷ், பிரணீஷ் ஆகியோா் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 12 நாள்களில் ஓடி உலகச் சாத... மேலும் பார்க்க

காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா கோரி பொதுமக்கள் மனு

காரைக்குடியில் ஆட்சேபனையற்ற நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருந்து வரும் பொதுமக்கள் தங்கள் வசிக்குமிடத்துக்கு பட்டா கோரி தனித்தனியாக காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா். காரைக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

திருப்பத்தூா் வட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க