செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: ‘கோல்டன் பேட்’ விருதை வெல்லப் போவது யார்?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கான ‘கோல்டன் பேட்’-ஐ வெல்லப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடைபெற்றுவந்த 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தத் தொடருக்கான இறுதிப்போட்டியில் வருகிற மார்ச் 9 ஆம் தேதி முன்னாள் சாம்பியன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதவிருக்கின்றன.

8 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை 11 சதங்கள் பதிவாகியுள்ளன. அதில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா 2 சதங்கள் விளாசியுள்ளார்.

இந்த நிலையில், அதிக ரன் குவித்தவருக்கு வழங்கப்படும் தங்கத்தினாலான கோல்டன் பேட் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிரித்திருக்கிறது.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

கோல்டன் பேட் விருதுடன் ஷிகர் தவான்...

அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் முதலிடத்தில் இருந்தாலும் அவர் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார். அவரைத் தவிர்த்து இந்தியாவின் விராட் கோலி, ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும், நியூசிலாந்து தரப்பில் வில் யங், வில்லியன்மசன், டாம் லேதம் ஆகியோரும் உள்ளனர்.

அனைவருக்கும் இடையே பெரிய ரன் வித்தியாசம் இல்லாததால் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடுபவருக்கே இந்த கோல்டன் பேட் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2025-சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்தவர்கள்

  • பென் டக்கெட் -227 ரன்கள்

  • ரச்சின் ரவீந்திரா - 226 ரன்கள்

  • விராட் கோலி- 217 ரன்கள்

  • ஷ்ரேயஸ் ஐயர் - 195 ரன்கள்

  • டாம் லேதம் -191 ரன்கள்

  • கேன் வில்லியம்சன் -189 ரன்கள்

  • ஷுப்மன் கில் - 157 ரன்கள்

  • வில் யங் - 150 ரன்கள்

2014, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவின் ஷிகர் தவான் கோல்டன் பேட்டை பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!

உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!

மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மகளிரணி விளையாடவிருக்கிறது.இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வருகிற ... மேலும் பார்க்க

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்குதான் எனது ஆதரவு! -மில்லர்

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நான் நியூசிலாந்து அணிக்குதான் ஆதரவு அளிப்பேன் என்று தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதியில் தென்னா... மேலும் பார்க்க

நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி! -ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

நான் இதுவரை கண்டிராத சிறந்த சேஸர் விராட் கோலி என்று ஸ்டீவ் ஸ்மித் புகழாரம் சூட்டியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 4 விக்கெட் வித்தியாசத்தில் தோ... மேலும் பார்க்க

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக முல்டர் சேர்ப்பு!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பிரைடன் கார்ஸுக்கு பதிலாக வியான் முல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் உள்பட 10 அணிகள் மோதும் 18-வது ஐபிஎல் தொடர் வருகிற ... மேலும் பார்க்க

ஒருநாள் போட்டிகளில் இருந்து முஷ்ஃபிகுர் ரஹிம் ஓய்வு!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் அறிவித்துள்ளார்.ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ரஹிம், தொடர்ந்து டெ... மேலும் பார்க்க

நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!

துபை : சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூஸிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் பார்க்க