செய்திகள் :

உற்பத்தி துறையைத் தேர்வு செய்த வருங்கால பில்லியனர்கள்!

post image

உலகளவில் தற்போதைய மற்றும் வருங்கால பில்லியனர்கள் குறித்து, 2700 பில்லியனர்கள் தெரிவித்த தகவல்கள் சமீபத்தில் ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு பில்லியன் டாலர் கொண்டிருக்கும் பணக்காரர்கள் குறித்து 2700 பில்லியனர்களிடம் இருந்து தரவுகள் சேமிக்கப்பட்டு, ஆய்வின் தரவறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு பில்லியன் டாலர் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறையில் இருப்பவர்களே. நிதித் துறையுடன் ஒப்பிடும்போது, தொழில்நுட்பத் துறையே அதிகளவில் பில்லியனர்களைக் கொண்டுள்ளது. அவர்களில் 60 வயதுக்கிடைப்பட்டவர்களே பெரும்பாலும் உள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் பில்லியனர்களின் சராசரி வயது 63.3 என்று இருந்த நிலையில், 2024-ல் 65.7 என்று மாறியுள்ளது. பில்லியனர்களில் 87 சதவிகிதத்தினர் ஆண்கள் (அவர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 12.4 டிரில்லியன்), 13 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்களாகவும் (பெண் பில்லியனர்களின் மொத்த நிகர சொத்து மதிப்பு 1.78 நிகர மதிப்பு) உள்ளனர்.

இதையும் படிக்க:மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

உலகளவில் ஒட்டுமொத்த பில்லியனர்களில் 30 சதவிகிதத்தினர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த பில்லியனர்களின் நிகர சொத்து மதிப்பில் 40 சதவிகிதமும் அமெரிக்காவில்தான் உள்ளது.

2023 முதல் 2024 வரையில் இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டில் மட்டும் இந்தியாவில் 26 பேர் பில்லியனர் மதிப்பைப் பெற்றனர். இந்தியாவில் தற்போது 191 பில்லியனர்கள் இருக்கின்றனர்.

கடந்தாண்டின் புதிய பில்லியனர்களில் 82 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் ஆண்களே. அதுமட்டுமின்றி, கடந்தாண்டு பில்லியனர்களில் 30 வயதுக்குட்பட்டோரில் 47 சதவிகிதத்தினர் பெண்களே.

தொழில்நுட்பத் துறையில் இருந்து அதிகளவில் பில்லியனர்கள் வந்தாலும், இனிவரும் காலங்களில் உற்பத்தித் துறையில் இருந்து புதிய பில்லியனர்கள் உருவாக வாய்ப்புள்ளது. இனிவரும் புதிய பில்லியனர்கள் இளையவர்களாக இருப்பதுடன், பெண் பில்லியனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

மெக்சிகோவில் 9 மாணவர்களை சித்ரவதை செய்து, கொலை செய்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.மெக்சிகோவில் பட்டப்படிப்பைக் கொண்டாடுவதற்காக 4 பெண்கள் உள்பட 9 மாணவர்கள், பிப்ரவரி 24 ஆம் தேதியில் ஓக்ஸாக்கா ... மேலும் பார்க்க

அதிகாரத்தில் நீடிக்க வர்த்தகப் போரைப் பயன்படுத்தும் ’ஆளுநர் ட்ரூடோ’: டிரம்ப்

அதிகாரத்தில் நீடிப்பதற்காக வர்த்தகப் போரைப் பயன்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரை ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க அதிபராக... மேலும் பார்க்க

அரபு நாடுகளின் அமைதி திட்டம்: அமெரிக்கா, இஸ்ரேல் நிராகரிப்பு

ஜெருசலேம் : காஸாவில் போா் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அரபு நாடுகள் முன்வைத்துள்ள செயல்திட்டத்தை அமெரிக்காவும் இஸ்ரேலும் நிராகரித்துள்ளன.இஸ்ரேலுக்கும் காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் கடந்த 2023 அக்ட... மேலும் பார்க்க

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சா் பங்கேற்க வாய்ப்பு

தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சா் அந்த்ரி சிபிஹா கலந்துகொள்ள உள்ளாா். ஆண்டுதோறும் தில்லியில் ரைசினா மாநாடு நடைபெறுகிறது. இதில் புவி அரசியல் விவகாரங்கள் குறித்து விவாத... மேலும் பார்க்க

ஜொ்மனி காா் தாக்குதல்: நீடிக்கும் மா்மம்

ஜொ்மனியின் மேற்குப் பகுதி நகரான மேன்ஹைமில் நடத்தப்பட்ட காா் தாக்குதல் குறித்த மா்மம் நீடித்துவருகிறது.அந்த நகரிலுள்ள பாரடெப்ளாட்ஸ் தெருவில் நடத்தப்பட்ட இந்தக் காா் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்; ச... மேலும் பார்க்க

ஹசீனா நாடு கடத்தல்: இந்தியாவிடம் பதில் இல்லை -வங்கதேசம்

டாக்கா : வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை நாடு கடத்துவது தொடா்பாக இந்தியாவிடம் அதிகாரபூா்வமாக எந்தப் பதிலும் இல்லை என்று அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் தெரிவித்தாா். வங்கதேசத்தில்... மேலும் பார்க்க