செய்திகள் :

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

post image

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், ஃபிபா அணியில் சுனில் சேத்ரி உள்பட 26 பேர் கொண்ட தனது அணியை அறிவித்தார்.

சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சுனில் சேத்ரி, 94 கோல்கள் அடித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஆனால், இந்திய அணியில் மீண்டும் களமிறங்க உள்ளார்.

இந்த மாதம் நடைபெறவுள்ள ஃபிபா நட்புறவு போட்டிக்கான இந்திய அணியில் கலந்துகொண்டு விளையாடுவதற்காக சுனில் சேத்ரி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுவிட்டதாக தேசிய கால்பந்து உச்ச அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய அணி

கோல்கீப்பர்கள்

அம்ரிந்தர் சிங், குர்மீத் சிங், விஷால் கைத்.

டிஃபெண்டர்கள்

ஆசிஷ் ராய், போரிஸ் சிங் தங்கஜாம், சிங்லென்சனா சிங் கோன்ஷாம், ஹ்மிங்தன்மாவியா, மெஹ்தாப் சிங், ராகுல் பெகே, ரோஷன் சிங், சந்தேஷ் ஜிங்கன், சுபாசிஷ் போஸ்.

மிட்ஃபீல்டர்கள்

ஆஷிக் குருனியன், ஆயுஷ் தேவ் செத்ரி, பிராண்டன் பெர்னாண்டஸ், பிரிசன் பெர்னாண்டஸ், ஜீக்சன் சிங் தௌனோஜாம், லாலெங்மாவியா, லிஸ்டன் கோலாகோ, மகேஷ் சிங் நௌரெம், சுரேஷ் சிங் வாங்ஜாம்.

முன்கள வீரர்கள்

சுனில் சேத்ரி, ஃபரூக் சௌத்ரி, இர்பான் யாத்வாட், லல்லியன்சுவாலா சாங்டே, மன்வீர் சிங்.

காங்கிரஸ் திவாலாகி விட்டது: ஜெ.பி. நட்டா

காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார்.இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, `... மேலும் பார்க்க

குஜராத் பேரவைத் தேர்தல்: ராகுல் காந்தி அகமதாபாத் பயணம்!

குஜராத்தில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலை மையப்படுத்தி ராகுல் காந்தி அகமதாபாத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.2027 ஆம் ஆண்டு குஜராத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை மையப்படுத்தி கா... மேலும் பார்க்க

ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்... மேலும் பார்க்க

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

பெங்களூரு தெற்கு எம்பியும் பாஜக தேசிய இளைஞரணி தலைவருமான தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கர்நாடக பாடகி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்துக்கும் பாரம்பரிய முறையில் வேத மந்திரங்கள் முழங்க சென்னையில் திர... மேலும் பார்க்க

ஓநாய் தாக்குதலுக்கு அடுத்ததாக நாய்களிடம் சிக்கிய உ.பி.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சிறுத்தை, யானை, ஓநாய் முதலான விலங்குகளின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது நாய்களின் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம்வரையில்... மேலும் பார்க்க

கங்கா மாதாவை மோடி அரசு ஏமாற்றிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு

கங்கையை சுத்தம் செய்கிறோம் என்ற பெயரில் மோடி அரசு கங்கா மாதாவை ஏமாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்வா கங்கை அம்மன் கோயிலுக்குச... மேலும் பார்க்க