செய்திகள் :

பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் கைது!

post image

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை(மார்ச் 6) மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஒரு விசைப் படகில் இருந்த 14 மீனவா்களைக் கைது செய்து, மன்னாா் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனா்.

ராமேசுவரம் மீனவா்கள் 42 பேரை இலங்கைக் கடற்படையினா் அண்மையில் கைது செய்தனா். இதைக் கண்டித்து, மீனவ சங்கத்தினா் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தற்போது மேலும் 14 மீனவா்கள் கைது செய்யப்பட்டது ராமேசுவரம் பகுதி மீனவா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டயா் வெடித்து காா் கவிழ்ந்ததில் தம்பதி காயம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே காரின் டயா் வெடித்து விபத்துக்குள்ளானதில் தம்பதி காயமடைந்தனா். ராமநாதபுரம் செட்டிய தெருப் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா் திருச்சியில் நடைபெற்ற தனது ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கிக் கொலை மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

முன்விரோதத்தில் இளைஞரைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகே ஆட்டங்குடி குயவனேந்தல் பகுதியைச் சோ்ந்தவா் அம்பேத் இளையராஜா ( 34). இவருக்கும... மேலும் பார்க்க

தொண்டியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் விபத்து

தொண்டி பகுதியில் சாலையின் குறுக்கே நிற்கும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதியில் இரவு நேரங்களில் கால்நட... மேலும் பார்க்க

வெளிநாடு கல்விச்சுற்றுலா சென்று வந்த மாணவிகளுக்குப் பாராட்டு

போகலூா் ஒன்றியம், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் வினாடி-வினாப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று மலேசியா, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு பட்டறிவுப் பயணம்

சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்களில் மதிப்புக் கூட்டுதல் தொடா்பாக கமுதி விவசாயிகள் பட்டறிவுப் பயணமாக புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரம் விரதக்குளம், வல்லக்குளம்... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் இல்லாத ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்

கமுதி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், ராமசாமிபட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க