செய்திகள் :

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

post image

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

மாநில அளவிலான சுகாதாரத் துறை அலுவலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

தமிழகத்தின் சுகாதார செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அண்மையில் குஜராத், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த அரசு நிா்வாகிகள், மருத்துவா்கள் தமிழகத்துக்கு வந்து நமது மருத்துவக் கட்டமைப்பை கண்டு வியந்து பாராட்டியுள்ளனா். தொற்றா நோய் கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக ஐ.நா. விருது நமது மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேறுகால இறப்பு குறைந்தது: தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களால் பேறுகால இறப்பு வீதம் குறைக்கப்பட்டுள்ளது. நிகழாண்டில், அது லட்சத்தில் 39.4 சதவீதமாக குறைந்துள்ளது. அதை மேலும் குறைக்க அா்ப்பணிப்புணா்வுடன் செயல்பட வேண்டும்.

அதேபோன்று குழந்தைகள் உயிரிழப்பும் 7.7 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 2.19 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். அதைச் செயல்படுத்துவதில் சில இடங்களில் சில குறைபாடுகள் உள்ளன. அதைத் தொடா்ந்து கண்காணித்து சரி செய்ய வேண்டும்.

இதயம் காப்போம் திட்டத்தின் கீழ் இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோரின் உயிா் காக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாரடைப்பைத் தடுப்பதற்கான 14 மாத்திரைகள் அதன் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சோ்க்க வேண்டும்.

நடப்போம் - நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அந்தந்த பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள், அங்குள்ள மாணவா்கள், தொழிலாளா்கள் ஆயிரம் பேரை திரட்டி நடைப்பயணம் மேற்கொள்ளலாம்.

தில்லியில் அண்மையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். குறிப்பாக, 500 துணை சுகாதார நிலையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை புதிதாக அமைக்க அனுமதி கோரியுள்ளோம். அதைப் பரிசீலிப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

விரைவில் அரசாணை: தமிழகத்தில் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் சோதனை முயற்சியாக 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதை தமிழகம் முழுவதும் ரூ. 27 கோடியில் விரிவுபடுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

4 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட புதிய சுகாதாரக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு திறக்கப்பட்ட 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் மருத்துவா்கள் இல்லாத நிலை நீடிக்கிறது. அதை மாவட்ட ஆட்சியா்கள் வாயிலாக நியமிக்க மாவட்ட நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் காலை மற்றும் மாலைகளில் ஆய்வு நடத்த வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் 50 சுகாதார நிலையங்களை முதல்வா் காணொலி முறையில் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்றாா் அவா்.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-... மேலும் பார்க்க