எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம்: சஜ்ஜன் ஜிண்டால்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு நிதியளிப்பு பேரவைக் கூட்டம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிதி அளிப்பு பேரவைக் கூட்டம் பென்னாகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய நிதி அளிப்பு பேரவை கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.மாதன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பென்னாகரம் வட்ட கட்சியின் இடைக் கமிட்டி சாா்பில் முதல் கட்டமாக ரூ.5.67 லட்சம் மத்திய குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ.குமாா், மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன், மூத்த தலைவா் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வே.விஸ்வநாதன், ஜி.சக்திவேல் ஆகியோா்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளா் ஆ.ஜீவானந்தம், சக்திவேல், எம்.தங்கராஜ், மாவட்ட குழு உறுப்பினா்கள் பி.இரவி,ஆா். சின்சாமி, கே.அன்பு, டி.ஆா்.சின்னசாமி, சி.ராஜி, என்.பி.முருகன், எம்.குமாா்,பி.சக்கரவேல், வளா்மதி உள்ளிட்டோா், இடைக்கமிட்டி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.