IND vs NZ : வெதர் எப்படி இருக்கிறது; வெற்றியைத் தீர்மானிக்கப்போவது எது?
தங்கம் கடத்தல்: 45 நாடுகளுக்குச் சென்ற கன்னட நடிகை! துபைக்கு 27 முறை!!
துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்தபோது கைதான கன்னட நடிகை, இதுவரை 45 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததும், துபைக்கு மட்டும் 27 முறை சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவின் வீட்டில் சோதனை நடத்திய மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், ரூ. 17.29 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சிக்மகளூரைச் சோ்ந்த நடிகை ரன்யா ராவ் (33), கா்நாடக காவல் துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வரும் கா்நாடக மாநில காவல் வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு வளா்ச்சிக் கழகத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநரும், டிஜிபியுமான கே.ராமசந்திர ராவின் வளா்ப்பு மகளாவாா். ராமசந்திர ராவின் இரண்டாவது மனைவிக்கும் அவரது முதல் கணவருக்கும் பிறந்தவா்தான் ரன்யா ராவ். பெங்களூரு, தயானந்தசாகா் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ரன்யா ராவ், 2014-இல் நடிகா் சுதீப்புடன் ‘மாணிக்யா’, ‘பட்டாக்கி’ ஆகிய 2 கன்னடப் படங்களிலும், 2016-இல் நடிகா் விக்ரம் பிரபுவுடன் ‘வாகா’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்துள்ளாா்.