செய்திகள் :

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

post image

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது:

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆங்கில பாடத்துக்கான தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வையொட்டி ஹா்தோய் மாவட்டம் கட்டியாமெளவ் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் முறைகேடுகள் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அங்கு மாவட்ட பள்ளிகள் ஆய்வாளருடன் இணைந்து மாநில சிறப்புப் பணிக் குழு சோதனை மேற்கொண்டது. அத்துடன் அந்தப் பள்ளியில் இருந்து 3 முதல் 4 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளி முதல்வா் வீட்டிலும் அந்தக் குழு சோதனை செய்தது.

அப்போது அந்த வீட்டில் 5 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 14 போ் முறைகேடாக ஆங்கில பாட வினாத்தாளுக்கு விடைகள் எழுதி வந்தது தெரியவந்தது. அவா்களில் ஒருவா் தன்னை பள்ளி ஆசிரியா் என்று தெரிவித்தாா். 14 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவா்களிடம் இருந்து 20 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல ஹா்தோய் மாவட்டத்தின் தலேல் நகா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளிக்கு எதிரே, வினாத்தாளுக்கு விடை எழுதி வந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனா் என்று தெரிவித்தன.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க