செய்திகள் :

`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!

post image

இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

தற்பொழுது EPFO பயனாளர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை எடுக்க குறைந்தபட்சம் 10 நாள்கள் முதல் சில வாரங்கள் வரை ஆகிறது. இதற்காக UMANG செயலி அல்லது www.epfindia.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துகின்றது. 10 நாள் முதல் சில வாரங்கள் வரை ஆவதால் அவசர காலத்திற்கு வருங்கால வைப்பு நிதியை பயனாளர்கள் பெற்றுக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. அதை தீர்க்கவே யுபிஐ மூலம் பணம் விரைவாகப் பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

யுபிஐ மூலம் வருங்கால வைப்பு நிதியை பெற EPFO பயனாளர்கள் தங்களுடைய ஜிபே, போன்பே போன்ற செயலிகளில் உள்ளே சென்று ‘EPFO Withdrawal’ என்னும் அம்சத்தை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் EPFO பயனர்களுக்கு உண்டான UAN எண்ணை உள்ளீடு செய்து KYC விவரங்களை சரிபார்த்து வருங்கால வைப்பு நிதியை திரும்ப பெற்றுக் கொள்ளும் படி புதிய வசதியையும் கொண்டுள்ளது. EPFOவின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டால் உடனடியாக தங்கள் யுபிஐ உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு வருங்கால வைப்பு நிதி வந்து சேர்ந்துவிடும்.

இந்த முயற்சியின் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட EPFO பயனாளர்கள் எளிமையாகவும், விரைவாகவும் வருங்கால வைப்பு நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய வசதி இந்த ஆண்டின் மே அல்லது ஜூன் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவ... மேலும் பார்க்க

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது. ரயில் நிலையங்களில் ஏற்படும்... மேலும் பார்க்க

``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினே... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்

வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் க... மேலும் பார்க்க

"அமித் ஷா, சந்தான பாரதி வித்தியாசம் தெரியும்" - கொதிக்கும் ராணிப்பேட்டை பாஜக; கிண்டலடிக்கும் திமுக

பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் ( CISF ) 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று காலை, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் செயல்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எஃப... மேலும் பார்க்க

``தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்பு... நான் சொல்லியும், முதல்வர் செய்யவில்லை'' - அமித் ஷா

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்துக்கு `ராஜ... மேலும் பார்க்க