செய்திகள் :

Railways: இனி கன்ஃபார்ம் டிக்கெட் இல்லாமல் இந்த ரயில் நிலையங்களுக்குள் செல்ல முடியாது!

post image

இந்தியாவில் உள்ள 60 முக்கிய ரயில் நிலையங்களில் உறுதிபடுத்தப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியன் ரயில்வேஸ் அறிவித்துள்ளது.

ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவிலேயே பெரிய நகரங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களில் இயல்பாகவே கூட்ட நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக விடுமுறை நாள்களிலும் பண்டிகை நாள்களிலும் கட்டுக்கடங்காத கூட்டத்தைக் காண முடியும். ரயிலில் செல்பவர்களைத் தவிர்த்து அவர்களை அனுப்பி வைக்கவும் அழைக்கவும் வரும் உறவினர்களும் இந்த கூட்டத்துக்கு காரணம்.

புதிய கட்டுப்பாடுகள் தேவையற்ற கூட்டத்தை தவிர்த்து, இனிமையான பயணத்தை வழங்க முயற்சிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரயில்வே

புதிய நடைமுறைகள் அமலுக்கு வரும் 60 ரயில் நிலையங்களில் முக்கியமானவை,

நியூ டெல்லி ரயில் நிலையம் (டெல்லி)

சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸ் (மும்பை)

ஹௌரா ஜன்க்சன் (கொல்கத்தா)

சென்னை சென்ட்ரல் (சென்னை)

பெங்களூரு நகர ரயில் நிலையம் (பெங்களூரு)

ரயில் நிலையத்தின் கூட்டம் மற்றும் புதிய கட்டுப்பாடுகளுக்கான தேவையைப் பொருத்து, மற்ற முக்கிய ரயில் நிலையங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரலாம்.

இந்த கட்டுப்பாடுகளால் தொடக்கத்தில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் நீண்டகால நோக்கில் இது பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வழிவகுக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவிகின்றனர்.

ரூ. 1,600 கோடி ஆலை; முத்தையா முரளிதரனுக்கு ஜம்மு காஷ்மீரில் இலவச இடம்?!; கிளம்பிய எதிர்ப்பு

ஜம்மு காஷ்மீரில், இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் சிலோன் பீவரேஜ் கேன் பிரைவேட் லிமிடெட் நிறுவன (Ceylon Beverage Can Pvt Ltd) ஆலை அமைக்க ஜம்மு காஷ்மீரில் இலவசமாக இடம் ஒதுக்கிய விவ... மேலும் பார்க்க

`இனி GPay, Phone Pe மூலம் PF பணம் எடுத்துக்கொள்ளலாம்' - மக்களே ஒரு குட் நியூஸ்!

இனி பயனாளர்கள் யுபிஐ மூலமே தங்களது பணத்தை எடுத்துக்கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இதனால் ஊழியர்கள் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியை (PF) நேரடியாக ஜிபே... மேலும் பார்க்க

``என் தாய்க்கு பெரும்பங்கு உண்டு'' - சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வான நெல்லை பேராசிரியை உருக்கம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரு மொழிகள் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் மலையாளம் கற்றுக் கொண்டேன். அதன் பின்னர் எனது தனிப்பட்ட ஆர்வத்தால் மொழிபெயர்ப்பு பணியை தொடங்கினே... மேலும் பார்க்க

வேலூர்: சுட்டிக்காட்டிய விகடன்; மீன் மார்க்கெட் வளாக மேடைக்கடைகள் சீரமைப்பு பணியிலிறங்கிய அதிகாரிகள்

வேலூர் மாநகராட்சியில் பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 2015-16 ஆம் நிதி ஆண்டில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.82.90 லட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி மேடைக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்தக் கடைகள் க... மேலும் பார்க்க

"அமித் ஷா, சந்தான பாரதி வித்தியாசம் தெரியும்" - கொதிக்கும் ராணிப்பேட்டை பாஜக; கிண்டலடிக்கும் திமுக

பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் ( CISF ) 56-வது ஆண்டு எழுச்சி தினக் கொண்டாட்டத்தையொட்டி, இன்று காலை, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் செயல்பட்டு வரும் சி.ஐ.எஸ்.எஃப... மேலும் பார்க்க

``தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்பு... நான் சொல்லியும், முதல்வர் செய்யவில்லை'' - அமித் ஷா

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலுள்ள தக்கோலத்தில் மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்) ஆட்சேர்ப்பு பயிற்சி மையம் (ஆர்.டி.சி) செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்துக்கு `ராஜ... மேலும் பார்க்க