செய்திகள் :

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் வாழ்த்து!

post image

சாகித்திய அகாதெமி விருதுக்கு தேர்வான விமலாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப. விமலா தமிழில் செய்த மொழிபெயா்ப்பு உள்பட 21 மொழிபெயா்ப்பு புத்தகங்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயா்ப்பு சாகித்திய அகாதெமி பரிசுக்கு 21 மொழிகளில் இருந்து புத்தகங்கள் தோ்வு செய்யப்பட்டன.

தமிழ் மொழிபெயா்ப்புக்கான தோ்வுக்குழுவில் இந்திரன், டாக்டா் ஜி. சுந்தா், எஸ். பக்தவத்சலா பாரதி ஆகியோா் இடம்பெற்றிருந்தனா். இவா்களின் பரிந்துரைப்படி ‘என்டே ஆண்கள்’ என்ற நளினி ஜமீலாவின் மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ‘எனது ஆண்கள்’ என்ற பெயரில் தமிழில் மொழிபெயா்த்த ப. விமலாவின் படைப்பு சிறந்த தமிழ் மொழிபெயா்ப்பு நூலாக தோ்வு செய்யப்பட்டது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் விழாவில் சிறந்த மொழிபெயா்ப்பாளா்களுக்கு ரூ. 50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் தாமிரப்பட்டயம் வழங்கப்படும் என்று சாகித்திய அகாதெமி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் கோப்பை: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் திரையிடல்!

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் ப. விமலாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்துச் செய்தியில், “'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.

கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

வீடு திரும்பினார் தயாளு அம்மாள்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் சிகிச்சை முடிந்து இன்று (மார்ச் 9) மாலை வீடு திரும்பினார்.92 வயதான அவர், மூச்சத் திணறல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தன... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா? பிரேமலதா பதில்

அதிமுக, தேமுதிக கூட்டணியில் விரிசலா என்ற கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பொதுச்ச... மேலும் பார்க்க

சென்னையில் புறநகர் ரயில்கள் பகுதியளவில் ரத்து எதிரொலி: ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

சென்னை : சென்னையில் இன்று(மார்ச் 9) கடற்கரை, எழும்பூர், கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை சென்னை கட... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே திடீரென தீப்பிடித்த ஆம்னி வேன்!

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் சேலம் நோக்கிச் சென்ற ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி மேம்பால பகுதியில் ஆத்தூரி... மேலும் பார்க்க

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அனைத்துமே அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலா... மேலும் பார்க்க

சென்னையில் நாளை மழை! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை!

வரும் மார்ச் 11 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.வரும் மார்ச் 11 ஆம் தேதி... மேலும் பார்க்க