செய்திகள் :

எலான் மஸ்க் இந்தியாவில் வெற்றி பெறுவது கடினம்: சஜ்ஜன் ஜிண்டால்

post image

இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபர் சஜ்ஜன் ஜிண்டால் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா கார்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தக்கட்டமாக இந்தியாவில் செயல்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியச் சந்தையில் எலான் மஸ்க் வெற்றி பெறுவது கடினம் என்று தொழிலதிபரும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான சஜ்ஜன் ஜிண்டால் கூறியுள்ளார்.

எர்ன்ஸ்ட் அன்ட் யங் தொழில்முனைவோர் விருதுகளில் பங்கேற்ற சஜ்ஜன் ஜிண்டால் பேசியதாவது, ``டெஸ்லா நிறுவனர் அறிவாளிதான்; அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அதற்காக, அவர் இந்தியச் சந்தையில் வெற்றி பெறுவார் என்று கூற முடியாது. அமெரிக்காவில் இருக்கும் அவருக்கு, இந்தியாவின் களச் சூழல் மற்றும் இந்தியாவின் தேவை குறித்து தெரியாது.

இதையும் படிக்க:மீண்டும் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க் ராக்கெட்! விமான சேவைகள் முடக்கம்!

நாங்கள் இங்கேயே இருக்கிறோம். மஹிந்திரா, டாடா செய்யக் கூடியதை எலான் மஸ்க்கால் செய்ய முடியாது. அது சாத்தியமுமில்லை.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிழலிருக்கும் அவரால் நினைத்ததை செய்ய முடியும். ஸ்பேஸ்எக்ஸ் மூலம் ராக்கெட்கூட அவர் செலுத்தலாம். ஆனால், இந்தியாவில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதானதல்ல’’ என்று தெரிவித்தார்.

குடியரசுத் துணைத்தலைவருக்கு நெஞ்சு வலி! எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்... மேலும் பார்க்க

ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!

கொல்கத்தா ஆர்ஜி கர் பெண் பயிற்சி மருத்துவரின் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உதவுமாறு, பலியான பெண்ணின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகம் முழுவதும் சனிக்கிழமையில் சர்வதேச மகளிர் நாள் கொண்டாடப... மேலும் பார்க்க

லக்னௌ: பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!

உத்தரப் பிரதேசத்தில் உள்ளூர் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ளூர் பத்திரிகையாளராக இருந்த ராகவேந்திரா பாஜ்பாய், சனிக... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் மாநில அந்தஸ்து வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: பரூக் அப்துல்லா வேண்டுகோள்

‘நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்’ என்று அந்த யூனியன் பிரதேசத்தின் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் பரூக் அப்துல்லா சனிக்கிழமை கே... மேலும் பார்க்க

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க