செய்திகள் :

விஜய் மிகவும் தன்னடக்கமானவர்..! பாபி தியோல் பேட்டி!

post image

ஜன நாயகன் படத்தின் வில்லன் பாபி தியோல் விஜய் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

விஜய் சினிமாவை விட்டு அரசியலில் களமிறங்கியுள்ளார். தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

அனிமல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் பிரபலமாகியுள்ள பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் நடித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்ற பாபி தியோல் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விஜய் ஒரு ஸ்வீட் ஹார்ட். மிகவும் எளிமையான, தன்னடக்கமான மனிதர்.

புதிய கதாபாத்திரங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சவாலான ஒன்றைச் செய்வது பிடிக்கும்.

கடவுள் என்மீது மிகவும் இரக்கம் காட்டுகிறார். கடைசி 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக நிற்கிறார்கள். எனது அப்பாவினால் எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறதென நினைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

நான் எந்த விருது வென்றாலும் அது ரசிகர்களுக்கானவை. ஓடிடி ஐபிஎல் போன்றது. யார் வேண்டுமானாலும் எந்த அணியில் வேண்டுமானாலும் விளையாடலாம் என்றார்.

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க

அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி. சுழல், சுழல் 2 இ... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார்.இதனைத் ... மேலும் பார்க்க

திரைத்துறையில் நீடிக்கும் பாலின பாகுபாடு..! மாதுரி தீக்‌ஷித்!

சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்ற நடிகை மாதுரி தீக்‌ஷித் திரைத்துறையில் ஆண்,பெண் பாகுபாடு அதிகமாக இருப்பதாகக் கூறியுள்ளார். 1984இல் ஹிந்தி சினிமாவில் அறிமுகமான மாதுரி தீக்‌ஷித் ஆண்கள் ஆதிக்கமுள்ள ச... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: வெட்டி வேர்ச் சப்பரத்தில் காட்சியளித்த சண்முகர்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்... மேலும் பார்க்க