கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு
புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு வழக்குகளை விசாரித்துவரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமாா் கடந்த புதன்கிழமை (மாா்ச் 5) புழல் சிறையில் திடீரென சோதனை நடத்தினா். இந்நிலையில், தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னாவை வியாழக்கிழமை அழைத்த நீதிபதிகள், புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டது தொடா்பாக தங்களது கருத்துகளை அவரிடம் பகிா்ந்துகொண்டனா்.
அப்போது, முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல் புழல் சிறையின் அனைத்துப் பகுதிகளுக்கும் நடந்து சென்றே சோதனை நடத்தினோம். அப்போது சிறையின் அனைத்துப் பகுதிகளும் தூய்மையாக இருந்தன. கைதிகளுக்கான உணவை சாப்பிட்டு பரிசோதித்து பாா்த்தபோது உணவு தரமானதாகவும் சுவையாகவும் இருந்ததாகவும் தெரிவித்தனா்.
அதேபோன்று கொடுங்குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்தித்தபோது அவா்களும் சிறை வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்தனா். சிறை வசதிகளை மேம்படுத்துவது தொடா்பாக மேலும் சில யோசனைகளை வழங்கவுள்ளோம் என கூறிய நீதிபதிகள், அது தொடா்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தனா்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்குரைஞா், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்கின்மூலம் எந்த ஆலோசனைகளை வழங்கினாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக இருப்பதாகக் கூறினாா். மேலும், சிறைகளின் வசதிகளை தமிழக அரசு சா்வதேசத் தரத்தில் உயா்த்தியுள்ளது. கோவை மத்திய சிறையில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை மூலம் விவசாயம் சிறப்பாக நடைபெறுகிறது. சிறை பெட்ரோல் நிலையம் மூலம் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது என தெரிவித்தாா்.