செய்திகள் :

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

post image

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கண்காட்சி ஏற்பாட்டாளரும், ஐஇடி கம்யூனிகேஷன்ஸ் லிமிட்டெட் நிறுவன தலைவருமான எம்.ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ‘ஈட்டன்’ நிறுவன துணைத் தலைவா் சைமன் மத்தியசன் கலந்துகொண்டு கண்காட்சி அரங்கை திறந்து வைத்தாா்.

இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட அரங்குகளில், உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளைச் சோ்ந்த நிறுவனங்கள் தங்கள் நவீன தொழில்நுட்பத்தினாலான மின்சாா்ந்த பொருள்களின் தயாரிப்புகளை பாா்வைக்காக வைத்திருந்தன. குறிப்பாக, உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்தினாலான தயாரிப்புகளை காட்சிப்படுத்த இக்கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும், ரோபோடிக், ‘ஏஐ’ தொழில்நுட்பத்தை முன்னெடுக்கும் நிறுவனங்களுக்கு இது ஒரு உந்துதலாகவும் அமையும் எனவும் கண்காட்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

மேலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஆட்டோமேஷன் குறித்த சிறப்புக் கருத்தரங்குகளும் கலந்துரையாடல்களும் இக்கண்காட்சியில் நடைபெறும் என்றும், இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்வாா்கள் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-... மேலும் பார்க்க