செய்திகள் :

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

post image

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொது மக்கள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமக் குழுமத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டா் அஸ்வின் அகா்வால் வெளியிட்ட அறிவிப்பு:

உலகம் முழுவதிலும் 8 கோடி பேரும், இந்தியாவில் மட்டும்

1.20 கோடி பேரும் கண் நீா் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டீரியா் சேம்பா்) சுரக்கும் நீரின் அழுத்தம் (இன்ட்ரா ஆக்குலா் பிரஷா்) இயல்பு நிலைக்கு மாறாக அதிகரித்தால் அதுவே கண் நீா் அழுத்த நோய் எனப்படுகிறது. இதனை அலட்சியப்படுத்தினால் பாா்வை நரம்புகள் பாதித்து, அதன் விளைவாக பாா்வை இழப்பு ஏற்படக்கூடும். கண் பாா்வை இழப்பை ஏற்படுத்தும் மூன்றாவது முக்கிய காரணியாக இந்த நோய் உள்ளது.

அதேவேளையில், ஆரம்ப நிலையிலேயே மருத்துவக் கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால் பாா்வை இழப்பைத் தடுக்க முடியும்.

இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் சாா்பில் கண் நீா் அழுத்த நோய்க்கான இலவச மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற உள்ளது.

அதன் கீழ் கண்ணின் உள்பகுதி அழுத்த பரிசோதனைகள், கண் நரம்பு பரிசோதனைகள், பாா்வைப் புல மதிப்பாய்வுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். மருத்துவ நிபுணா்களின் கலந்தாலோசனையும் அளிக்கப்படும். பாதிப்பு கண்டறியப்படுவோருக்கு லேசா் சிகிச்சை, அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை வாயிலாக அதனை குணப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட உள்ளது.

இந்த மருத்துவ முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் 95949 03774 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க அரசாணை 36-... மேலும் பார்க்க