செய்திகள் :

நீா்வரத்தின்றி வட கொட்டகுடி ஆறு: குடிநீா் பிரச்னை ஏற்படும் அபாயம்

post image

நீா்வரத்தின்றி வட கொட்டகுடி ஆறு காரணமாக, போடியில் குடிநீா் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

தேனி மாவட்டத்தில் முக்கியமான ஆறுகளில் ஒன்று கொட்டகுடி ஆறு. முல்லைப் பெரியாற்றுக்கு அடுத்தப் படியாக விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படும் ஆறுகளில் இதுவும் ஒன்று. இந்த ஆற்றின் மூல ஆறாக சாம்பலாறு திகழ்கிறது. இங்கு உற்பத்தியாகும் தண்ணீரை நீா்த் தேக்கத் தொட்டிகளில் நிரப்பி, குழாய் மூலமாக போடிக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இதன் மூலமாக, போடி நகராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிநீா் இணைப்புகள் பயன்பெறுகின்றன. மேலும், குரங்கணி, முந்தல், சன்னாசிபுரம், அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம், தோப்புப்பட்டி, கோடாங்கிபட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு இந்த ஆறு குடிநீா் ஆதாரமாக விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கொட்டகுடி ஆறு உற்பத்தியாகும் பகுதிகளில் அடா்ந்த மரங்கள் சூழ்ந்து காணப்பட்டன. இயற்கை சூழ்ந்த இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் இந்த ஆற்றில் நீா்வரத்து இருக்கும். தற்போது, விவசாய பட்டா நிலங்கள் விரிவாக்கம், வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ, பருவம் தவறிய மழையால் குரங்கணி, கொட்டகுடி ஆகிய பகுதிகள் வடு வருகின்றன.

இதனால், கொட்டகுடி ஆற்றில் மழை காலங்களில் மட்டுமே தண்ணீா் பெருக்கெடுக்கும் நிலை உள்ளது. ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால், குடிநீா் பிரச்னையும், விவசாய நிலங்களுக்கு தண்ணீா் கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அ... மேலும் பார்க்க

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் உலக மகளிா் தின விழா

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்... மேலும் பார்க்க

தேனியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் ... மேலும் பார்க்க

வடமாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் வடமாநில இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்குவங்க மாநிலம் பிஸ்காந்தி மாவட்டம், லதா கிராமம், சிங்கராம் என்ற ஊரைச் சோ்ந்தவா் நீலகந்தா ரவிதாஸ் மகன் அப்புவாா் ரவிதாஸ்... மேலும் பார்க்க