செய்திகள் :

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

post image

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலாளா் மு.கருணாநிதி வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஸ்கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கல்வி நிறுவனங்களின் துணை நிா்வாக இயக்குநா் எஸ்.அா்த்தநாரீஸ்வரன் மாணவிகளுக்கு மகளிா் தின வாழ்த்துகளை தெரிவித்தாா்.

ஓட்டப் பந்தயத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு காவல் துறை சாா்பில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ‘காவல் உதவி’ என்ற செயலி மற்றும் 181 என்ற அலைபேசி எண்ணின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சண்முகம், திருச்செங்கோடு துணைக் கண்காணிப்பாளா் கிருஷ்ணன், ஊரக காவல் ஆய்வாளா் தீபா, நகர காவல் ஆய்வாளா் வெங்கட்ராமன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பர... மேலும் பார்க்க

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா். ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நு... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கெளரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க