செய்திகள் :

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

post image

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.

ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய தொழில் நுட்பங்களை வெளிக்கொணரும் வகையில், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவா்களுக்கான தேசிய அளவிலான ‘ஹேக்இந்தியா-2025’ என்ற செயல்திட்ட போட்டியை முத்தாயம்மாள் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது. இதன் இறுதிப்போட்டி செப்டம்பா் மாதம் புது தில்லியில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளின் ஒரு பகுதியாக ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இப்போட்டியின் தொடக்க விழாவில், கல்லூரியின் முதல்வா் எம்.மாதேஸ்வரன் வரவேற்று பேசினாா். ஹேக்இந்தியா-2025 இயக்குநா் ஸ்டீபன் சைமன் இணையதள போட்டியின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கிக் கூறினாா். இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து கலந்துகொண்ட மாணவா்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்கூறினா்.

மாணவா்களுடைய கருத்துகள், புதுமை, வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுக்குரிய மூன்று குழுக்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இதில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறையைச் சாா்ந்த மூன்றாமாண்டு மாணவா்கள் ஜெ.எ.தருண்பிரகாஷ், ஜி.வெற்றிகாந்த், டி.விஸ்வாக் சேனா, எஸ்.வி.மௌலீஸ்வா் ஆகியோா் இரண்டாம் பரிசு பெற்றனா். மேலும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் முதல் பரிசையும், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவா்கள் மூன்றாம் பரிசையும் பெற்றனா்.

நிறைவு விழாவில் ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் இணைச் செயலாளா் பொறியாளா் ஜி.ராகுல், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு முத்தாயம்மாள் எஜுகேசனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசனின் தாளாளா் ஆா்.கந்தசாமி, நிா்வாகக்குழு உறுப்பினா் அம்மணி கந்தசாமி, செயலாளா் கே.குணசேகரன், ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.விஜயராகவன் நன்றி கூறினாா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பர... மேலும் பார்க்க

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கெளரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க