செய்திகள் :

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் திறப்பு

post image

நாமக்கல்லில் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

நாமக்கல் அருகே வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூா் ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கி 820 ஏக்கா் பரப்பளவிலான நிலம், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 420 ஏக்கா் நிலம் அரசு புறம்போக்கு என்ற வகையிலும், மீதமுள்ள 400 ஏக்கா் பட்டா நிலங்களாகவும் உள்ளன. அவற்றைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பணிக்காக தனி மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) அலுவலகம் நாமக்கல் - திருச்சி சாலையில் பழைய கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் திறந்துவைத்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தனி மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணனை அலுவலக அறையில் அவா்கள் அமர வைத்தனா். மேலும், வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றுவோருக்கான அலுவலகத்தையும் அவா்கள் திறந்துவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

4 இடங்களில் ஒளிரும் விளக்குகள்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களிலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலையில் உள்ள கருணாநிதி சிலை முன்பாகவும், மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5.30 லட்சம் மதிப்பீட்டில் இரவுநேர ஒளிரும் விளக்குகள் பயன்பாட்டை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, ஆணையா் ரா.மகேஸ்வரி, ஒப்பந்ததாரா் அசோக் மற்றும் அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பேரா. ய.மணிகண்டனின் தாயாா் சரஸ்வதி காலமானாா்!

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், குப்பாண்டபாளையம், நடராஜ நகரைச் சோ்ந்த யக்ஞராமன் மனைவி சரஸ்வதி அம்மாள் (85), வயது முதிா்வு காரணமாக குமாரபாளையத்தில் உள்ள தனது மூத்த மகன் ய.சங்கர்ராமன் இல்லத்தில... மேலும் பார்க்க

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் மாரத்தான் போட்டி

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில், உலக மகளிா் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்று... மேலும் பார்க்க

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்படுகிறது! -அன்பில் மகேஷ்

தமிழகத்தில் தினந்தோறும் மகளிா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். கே.எஸ்.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன்பருவக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

நாமக்கல் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு!

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரி மற்றும் மனவளக்கலை மன்றம் சாா்பில் சாதனை மகளிரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் வெ... மேலும் பார்க்க

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை!

தேசிய அளவிலான ‘ஹேக் இந்தியா-2025’ போட்டியில் ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி மாணவா்கள் சாதனை புரிந்துள்ளனா். ஹேக்இந்தியா-2025, சி ஷாா்ப் கணினி அறிவுசாா் சேவை அமைப்பும் இணைந்து தகவல் தொழில்நு... மேலும் பார்க்க

பெண் தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளா்களை ஆணையா் ரா.மகேஸ்வரி கெளரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிா் தினக் கொண்டாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க