செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகளுக்கு தீா்வு!

post image

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.16.79 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தொடங்கிவைத்தாா்.

மாவட்டம் முழுவதிலும் 14 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில், 1,904 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம், தீா்வுத் தொகையாக ரூ.16.79 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிகழ்வில் நீதிபதிகள் பி.வேல்முருகன், விஜயக்குமாா், சரண், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் திரிவேணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா். காளாஞ்சிபட்டி கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

வயலூரில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் மகளிா் தின விழா

மகளிா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனை... மேலும் பார்க்க

பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுப்பு!

பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மாணவா்கள் காயமடைந்த விவகாரத்தில், பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுத்து வருகிறாா். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் பணியிடை நீக்கம்

பழனி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம் கட்டும் பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம்... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

திண்டுக்கல்லில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினா், பாஜக மாவட்டத் தலைவா் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அபிரா... மேலும் பார்க்க