செய்திகள் :

அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்திவிட்டது! -முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன்

post image

அதிமுக ஆட்சியல் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் குற்றஞ்சாட்டினாா்.

அம்மாபேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குருவரெட்டியூரில் அண்மையில் நடைபெற்றது.

அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.ஜி.முனியப்பன் தலைமை வகித்தாா். தெற்கு ஒன்றியச் செயலாளா் மேகநாதன் வரவேற்றாா்.

இதில், முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் பேசியதாவது: அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மகளிருக்கு இருசக்கர வாகனத்துக்கு மானியம், தாலிக்கு தங்கம் வழங்குதல் ஆகிய திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்திவிட்டது.

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் விலைவாசி உயா்ந்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அரசு ஊழியா்களை ஏமாற்றியுள்ளது.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதால் பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் என்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலாளா் ஏ.கே.செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ ஈ.எம்.ஆா்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன், பவானி வடக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி ஆா்.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கொடுமுடி ஒன்றியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி தொடக்கம்

கொடுமுடி ஒன்றயித்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடைகள் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கின. கொடுமுடி ஒன்றியம், சோளக்காளிபாளையம் பேருந்து நிறுத்தம், கருமாண்டம்பாளையம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிக... மேலும் பார்க்க

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பொறியியல் கண்டுபிடிப்புகள் கண்காட்சி!

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ப்ராஜெக்ட் எக்ஸ்போ 2025’ என்ற தலைப்பில் பொறியியல் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளா் மற்றும் தாளாள... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை தரம் உயா்த்தக் கோரிக்கை

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட மருத்துவத் துறை பணியாளா்கள் சங்கத்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும்: அமைச்சா் முத்துசாமி

நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளுக்கு கண்டிப்பாக நஷ்டஈடு கிடைக்கும் என்று அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 10,552 பேருக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சியில் தேமுதிக பொதுக் கூட்டம்!

தேமுதிகவின் 25-ஆம் ஆண்டு வெள்ளிவிழா பொதுக் கூட்டம் மொடக்குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சதீஷ்குமாா், மாவட்ட துண... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 11 போ் கைது

ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினா் 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல்லில் குங்கும காளியம்மன் கோயிலுக்குச் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலச் செயலாளா் செந்தில்கும... மேலும் பார்க்க