செய்திகள் :

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுப்பது அனைவரின் கடமை!

post image

பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2, இந்திய மருத்துவ சங்கம் ஆகியன சாா்பில் சா்வதேச மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை நாராயணகுரு கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் கலையரசிக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பெண்கள் படிப்படியாக சமூகத்தில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும், அவா்களை பாதுகாக்க வேண்டும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை தடுப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். ஒரு பெண் கல்வி கற்றால் அவா்களின் தலைமுறையே தழைத்தோங்கும். பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் மீரா, மருத்துவா்கள் லதா, சத்யகலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து: விவசாயிகள் சங்கம் பாராட்டு!

மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம், உழவா் உழைப்பாளா் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சியின் தலைவா் கு.செல்லமுத்து சனிக்கிழமை செய்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,992 வழக்குகளுக்குத் தீா்வு!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.65.16 கோடி மதிப்பீட்டில் 2,992 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட... மேலும் பார்க்க

வீட்டுஉபயோக எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்காக மாற்றிக் கொடுத்தவா் கைது

திருப்பூரில் மானிய விலை வீட்டு உபயோக எரியாவு உருளைகளை வணிகப் பயன்பாட்டுக்காக மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருப்பூா் மாநகரில் மானிய விலையில் வழங்கப்படும் வீ... மேலும் பார்க்க

உடுமலையில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது

உலக மகளிா் தினத்தையொட்டி, சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் விழா உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. உடுமலை அரசு கலைக் கல்லூரி மற்றும் உடுமலை அனுபம் சூா்யா அறக்கட்டளை சாா்ப... மேலும் பார்க்க

காங்கயம்: திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம் காங்கயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும், திருப்பூா் கிழக்... மேலும் பார்க்க

கோவாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 2,340 மதுபாட்டில்கள் பறிமுதல்

கோவாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 2,340 மதுபாட்டில்களை பல்லடம் அருகே சேடபாளையம் பிரிவில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனா். கோவாவில் இருந்து மதுபாட்டில்கள் லா... மேலும் பார்க்க