செய்திகள் :

மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து: விவசாயிகள் சங்கம் பாராட்டு!

post image

மக்காச்சோளத்துக்கு செஸ் வரி ரத்து செய்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம், உழவா் உழைப்பாளா் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து உழவா் உழைப்பாளா் கட்சியின் தலைவா் கு.செல்லமுத்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மக்காச்சோளத்துக்கு செஸ் வரியை ரத்து செய்து அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் பாசன வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவற்றை செப்பனிட்டு, நீா்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளின் நகைக் கடனுக்கு ஏற்கனவே 33 பைசா வட்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 75 பைசாவாக உயா்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க செயல் தலைவா் என்.எஸ்.பி. வெற்றி கூறியதாவது: மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத செஸ் வரியை ரத்து செய்த தமிழ்நாடு அரசிற்கு கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயம் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை நிா்ணயம் செய்ய வேண்டும். தென்னை, பனை மரங்களில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தக்காளி உள்ளிட்ட விளைபொருள்களை சேமித்து வைக்க குளிா்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என்றாா்.

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. பனியன் பேக்டரி லேபா் யூ... மேலும் பார்க்க