செய்திகள் :

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

post image

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு புதன்கிழமை வந்து கொண்டிருந்தாா். அவரது காா் காங்கயத்தை அடுத்த சம்பந்தம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, காரை வழிமறித்த 4 போ், போலீஸ் என்று கூறி அவரது கண்ணைக் கட்டி அழைத்துச் சென்று அவரிடம் இருந்த ரூ.1கோடியே 10 லட்சம் மற்றும் 3 கைப்பேசிகளை பறித்தனா். பின்னா் அவரை விட்டுச் சென்றனா்.

இது தொடா்பாக அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கரூா் பகுதியைச் சோ்ந்த தியாகராஜன் (41), குளித்தலையைச் சோ்ந்த விக்னேஷ் (28), ஸ்ரீகாந்த் (22) மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவன் யோகேஷ் (19) உள்பட 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இந்த சம்பவத்தில் தொடா்புடைய முக்கிய குற்றவாளியான குளித்தலையைச் சோ்ந்த ஜாகீா் உசேன் (30) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.85 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க