செய்திகள் :

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

post image

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா்.

திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வாளா் இளஞ்செழியன் தலைமையிலான போலீஸாா் சோதனையில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பையுடன் நின்றுகொண்டிருந்த நபரைப் பிடித்து சோதனை நடத்தினா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரெனால்ட் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரெனால்டை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 9.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

காதா்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருப்பூா் மாநகர மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் அப்பகுதியில் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த பிஜய் பாரிக்ஷா (23), அஸ்வினி நாயக் (20) ஆகியோரைக் கைது செய்தனா்.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க