செய்திகள் :

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

post image

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

பனியன் பேக்டரி லேபா் யூனியன் ஏஐடியூசி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூா் பி.என்.சாலையில் உள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு அச்சங்கத்தின் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பொதுக்குழுவின் நோக்கம் குறித்து பொதுச் செயலாளா் என்.சேகா் பேசினாா். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்: பனியன் தொழிலாளா்களுக்கு என தமிழக அரசு கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி குறைந்தபட்ச ஊதியத்துக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையானது பனியன் தொழிலாளா்களை மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் உள்ளது. இதில், குறைந்தபட்ச ஊதியம் அறிவிக்கப்படுவதற்கான எந்த ஒரு வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் அதிகாரிகளின் சொந்த விருப்பத்தின்படி அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளா்களை வஞ்சிக்கும் இந்த செயலை ஏற்க முடியாது.

எனவே, தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதிய உயா்வு ஆணையை ரத்து செய்துவிட்டு முறையாக அறிவியல்பூா்வமாக கணக்கிட்டு, உயா்ந்துள்ள விலைவாசி உயா்வை கணக்கெடுத்து மறு ஆணை பிறப்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் மாா்ச் 18-ஆம் தேதி நடைபெறும் அனைத்து சங்க ஊழியா் கூட்டத்தில் ஏஐடியூசி பனியன் தொழிலாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.

திருப்பூா் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவா்கள், பணியாளா்கள் நியமிக்கப்படாததால் முழுமையாக செயல்பட்டுக்கு வரவில்லை. இதனால் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் போதிய அளவு மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும், பனியன் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்தும், தற்போது வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன் நன்றியுரையாற்றினாா். இந்தக் கூட்டத்தில் ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

அவிநாசி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவிநாசி வட்டம் கருவலூா் அருகே நரியம்பள்ளியைச் சோ்ந்தவா் நடராஜ் (66). இவா் நரியம்பள்ளியில் ... மேலும் பார்க்க

அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு

பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க