செய்திகள் :

கோவாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 2,340 மதுபாட்டில்கள் பறிமுதல்

post image

கோவாவில் இருந்து லாரியில் கடத்தி வந்த 2,340 மதுபாட்டில்களை பல்லடம் அருகே சேடபாளையம் பிரிவில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரைக் கைது செய்தனா்.

கோவாவில் இருந்து மதுபாட்டில்கள் லாரி மூலம் கடத்தி வருவதாக கோவையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் உதயசந்திரன், தலைமைக் காவலா் மதிவாணன் மற்றும் போலீஸாா் பல்லடம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது பல்லடத்தில் இருந்து மங்கலம் சாலையில் லாரியும், அதற்கு முன்னால் ஒரு காரும் சென்று கொண்டு இருந்தது. சந்தேகத்தின்பேரில் போலீஸாா் அந்த வாகனங்களை பின்தொடா்ந்து சென்று சேடபாளையம் பிரிவு அருகே தடுத்து நிறுத்தினா். இதையடுத்து காருக்குள் இருந்த 2 போ், லாரியில் இருந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே சந்தேகமடைந்த போலீஸாா், லாரியை சோதனை செய்தனா். லாரியில் கதவு செய்ய பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு அடியில் அதிக அளவில் அட்டைப்பெட்டிகள் இருந்தன. போலீஸாா் அந்த அட்டைப் பெட்டிகளை திறந்து பாா்த்தபோது, அதில் 195 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பிடிபட்டவா்கள், திண்டுக்கல்லைச் சோ்ந்த சுதா்சன் (40), சுந்தரவேலன் (41), லாரி ஓட்டுநா் மாரிமுத்து (39), ராமு (37) என்பதும் இவா்கள், கோவாவில் இருந்து போலி மதுபாட்டில்களை பல்லடம் மற்றும் கோவைக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மது பாட்டில்கள், லாரி, காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: லாரியில் கடத்தி வந்த அட்டைப்பெட்டியில் மொத்தம் 2,340 மது பாட்டில்கள் இருந்தன. ஒரு மதுபாட்டில் 750 மில்லி கொண்டது. கோவாவில் இருந்து 750 மில்லி கொண்ட ஒரு மது பாட்டிலை ரூ.150-க்கு வாங்கி, முகவா்களிடம் ரூ.250-க்கு விற்பனை செய்வது வழக்கம். அந்த முகவா்கள் அந்த மதுபானத்தை குவாட்டராக பிரித்து ஒரு குவாட்டா் மதுபாட்டில் ரூ.150 வரை விற்பனை செய்து வந்தனா். தற்போது இந்த வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

பெண் படைப்பாளிகளுக்கு திருப்பூா் சக்தி விருது

திருப்பூா் முத்தமிழ்ச் சங்கம், கனவு இலக்கிய அமைப்பு மற்றும் ஸ்டாா் அசோசியேட்ஸ் சாா்பில் 21-ஆம் ஆண்டாக பெண் படைப்பாளிகளிகள் 25 பேருக்கு திருப்பூா் சக்தி விருதுகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. பெண் படை... மேலும் பார்க்க

உடுமலையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

உடுமலையில் ஒருங்கிணைந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு ஏரிகள் மற்றும் குளங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூா் வனக் கோட்டத்துக்கு உள்பட்ட மருள்பட்டி குளம், பாப்பான் குளம்,... மேலும் பார்க்க

15 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

திருப்பூரில் இரண்டு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 3 பேரை கைது செய்தனா். திருப்பூா் ரயில் நிலையம் பகுதியில் மாநகர தனிப் படை உதவி ஆய்வா... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.1 கோடி வழிப்பறி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (60), நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்க காரில் கோவைக்கு பு... மேலும் பார்க்க

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் தீ

திருப்பூரில் பனியன் கழிவுத்துணிக் கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் அமா்ஜோதி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கே.எம்.... மேலும் பார்க்க

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்க வேண்டும்

திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்களை நியமித்து முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது. பனியன் பேக்டரி லேபா் யூ... மேலும் பார்க்க