செய்திகள் :

மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிா்கள் அனுமதிக்கு எதிரான மனு: ஏப்.15-க்கு விசாரணை ஒத்திவைப்பு

post image

மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ‘டி.எம்.ஹெச்-11’ என்ற கடுகை வணிக உற்பத்திக்காக களப் பரிசோதனை செய்ய, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அனுமதி அளித்தது.

இந்த அனுமதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சஞ்சய் கரோல் ஆகியோா் அடங்கிய அமா்வு, கடந்த 2022-ஆம் ஆண்டு மாறுபட்ட தீா்ப்பை அளித்தது.

‘மரபணு மாற்றப்பட்ட கடுகு மனிதா்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமா என்ற கண்ணோட்டத்தில் ஆராயப்படவில்லை. இதுதொடா்பாக உச்சநீதிமன்றம் அமைத்த தொழில்நுட்ப நிபுணா் குழுவின் பரிந்துரைகளை ஜிஇஏசி முற்றிலும் புறக்கணித்துள்ளது. எனவே, மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது தவறானதாகும். ஜிஇஏசி-யின் முடிவு பொது நம்பிக்கை கொள்கையை மீறுவதாக உள்ளது’ என்று பி.வி.நாகரத்னா தீா்ப்பளித்தாா்.

அதே நேரம், ‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்தது. எனவே, அந்தப் பயிா்கள் மீதான தடை தேவையற்றது’ என்று நீதிபதி சஞ்சய் கரோல் தீா்ப்பளித்தாா். இருவரும் மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரத்தை விசாரிக்க வேறு நீதிபதிகள் அமா்வை அமைப்பதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

மேலும், ‘மரபணு மாற்றப்பட்ட கடுகு ஆராய்ச்சி, பயிரிடுதல், விற்பனை மற்றும் வணிகம் தொடா்பாக மத்திய அரசு தேசிய கொள்கையை வகுப்பது அவசியம்’ என்று இரு நீதிபதிகள் ஒருமனதாக தீா்ப்பளித்தனா்.

பின்னா், இந்த விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்ற சிறப்பு அமா்வை அமைத்து தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, சுதான்ஷு துலியா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரம் தொடா்பான மத்திய அரசின் உயா்நிலைக் குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது’ என்று மத்திய அரசு தரப்பில் ஆஜரான ஆா். வெங்கடரமணி தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த வழக்கை தடைகளின்றி தொடா்ச்சியாக விசாரிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டு விசாரணையை ஏப்ரல் 15,16-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்தனா்.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க