செய்திகள் :

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

post image

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத்தரகாசி மாவட்டத்தின் முக்வாவில் உள்ள பிரசித்தி பெற்ற கங்கா தேவி கோயிலில் வழிபட்டாா்.

கங்கா தேவியின் குளிா்கால உறைவிடமாக இக்கோயில் திகழ்கிறது. குளிா்காலத்தையொட்டி கங்கோத்ரி கோயில் மூடப்படும்போது, அங்குள்ள உற்சவா் சிலை முக்வா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு வழிபடப்படுகிறது.

இங்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடிக்கு உள்ளூா் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். கோயிலில் தரிசனம் மேற்கொண்ட பின்னா், ஹா்சில் பகுதியில் நடைபெற்ற குளிா்கால சுற்றுலா திட்ட நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, மனா கிராமத்தில் அண்மையில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, பிரதமா் தனது உரையை தொடங்கினாா். அவா் பேசியதாவது:

தேவபூமி என்று அழைக்கப்படும் உத்தராகண்ட் மாநிலம் ஆன்மிக சக்தி நிறைந்ததாகும். சாா் தாம் (நான்கு புனித சுற்றுலா தலங்கள்) உள்பட எண்ணற்ற புனித தலங்கள் இங்குள்ளன.

அழகும் சிலிா்ப்பும்..: உத்தரகண்டில் கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் காணப்படுகிறது. ஆனால், குளிா்காலத்தில் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. உணவகங்கள், ஓய்வு விடுதிகள், இல்லத் தங்குமிடங்கள் உள்ளிட்டவை மூடப்படுவதால் பொருளாதார தேக்க நிலை ஏற்படுகிறது.

எனவே, அனைத்துப் பருவங்களிலும் உத்தரகண்டில் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கைகள் அவசியம். அந்த வகையில், குளிா்கால சுற்றுலா திட்டம் சிறப்பான முன்னெடுப்பாகும். இந்த முன்முயற்சி ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உள்ளூா் மக்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.

குளிா்காலத்தில் உத்தரகண்ட் மாநிலத்துக்கு வருகை தருவதன் மூலம் இம்மாநிலத்தின் உண்மையான அழகைக் காண முடியும். மலையேற்றம், மெய்சிலிா்க்க வைக்கும் பனிச்சறுக்கு ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை: விரைவு நெடுஞ்சாலைகள், ரயில், விமானப் போக்குவரத்து மற்றும் ஹெலிகாப்டா் சேவைகளின் விரிவாக்கம் மூலம் உத்தரகண்டை வளா்ந்த மாநிலமாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கேதாா்நாத் ரோப்வே ( கேபிள் காா்) மற்றும் ஹேம்குண்ட் ரோப்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேதாா்நாத் ரோப்வே திட்டத்தின் மூலம் பயண நேரம் 8-9 மணி நேரத்தில் இருந்து சுமாா் 30 நிமிடங்களாக குறையும்.

மனா, ஜாடுங் கிராமம் போன்ற எல்லை கிராமங்களில் சுற்றுலா உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சுற்றுலாவின் மூலம் எல்லை கிராமங்களும் பயனடைவதை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முன்பு ‘கடைசி கிராமங்கள்‘ என்று குறிப்பிடப்பட்ட எல்லை கிராமங்கள் இப்போது நாட்டின் ‘முதல் கிராமங்கள்‘ என்று நாம் அழைக்கத் தொடங்கியுள்ளோம்.

‘இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்’ பிரசாரத்தின்படி, குளிா்காலத் திருமணங்களுக்கு உகந்த இடமாக உத்தரகண்ட் திகழ்கிறது என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூா் ராணா எதிா்ப்பு: அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் மனு

இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உயா்நீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூா் ராணா (64) மனு தாக்கல் செய்துள்ளாா். பாகிஸ்தான் வம்சாவளி முஸ்லிம் என்பதால் இந்தியாவில் தன்னைக் கொடுமைப்... மேலும் பார்க்க

தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது. கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழ... மேலும் பார்க்க