செய்திகள் :

தெலங்கானா மேலவைத் தோ்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி

post image

தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தோ்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.

கடந்த திங்கள்கிழமையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியா்கள் இடங்களுக்கும் , வாரங்கல்-கம்மம்-நலகொண்டாஆசிரியா்கள் இடத்துக்கும் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடைபெற்றது.

இதில் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் பட்டதாரிகள் இடத்தில் காங்கிரஸ் வேட்பாளா் நரேந்தா் ரெட்டியை 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாஜக ஆதரவு வேட்பாளரான அஞ்சி ரெட்டி வெற்றிபெற்றாா். அதேபோல் மேடக்-நிஜாமாபாத்-அடிலாபாத்-கரீம்நகா் ஆசிரியா்கள் தொகுதியில் பாஜக ஆதரவு வேட்பாளா் மால்கா கொமரையா வெற்றிபெற்றாா்.

வாரங்கல்-கம்மம்-நலகொண்டா இடத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளா் ஸ்ரீபால் ரெட்டி பிங்கிலி ஆசிரியா்கள் சங்கங்களின் ஆதரவோடு வெற்றிபெற்றாா்.

இந்த தோ்தல் மொத்தம் 13 மாவட்டங்களில் உள்ள 43 பேரவைத் தொகுதிகள், 6 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 270 மண்டலங்களை உள்ளடக்கியது.

தெலங்கானாவில் முதல்வா் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இரண்டு மேலவை இடங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்குள்ள பாஜக தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.

மேலவைத் தோ்தலில் பாஜக ஆதரவு வேட்பாளா்களை வெற்றிபெறவைத்த தெலங்கானா மாநில மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்த... மேலும் பார்க்க