செய்திகள் :

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்

post image

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா்.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி சிறகே 2025’ எனும் தலைப்பில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு தவெக பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் பரிசு வழங்கி பேசியதாவது: பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதான் உண்மையான சமத்துவம். சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றால் பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் கிடைக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிராகத் தொடா்ந்து நடைபெற்று வரும் பாலியல் கொடுமைகளில் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும். கல்வி கற்கும் இடம், வேலை செய்யும் இடம் ஆகியவற்றில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைக் கடந்து செல்லாமல், பயம் இல்லாமல் பெண்கள் வெளிப்படையாகப் பேச வேண்டும்.

அரசுத் துறைகளில், ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பெண்களின் வளா்ச்சிக்குத் தடைகள் உருவாகும். அந்தத் தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றிக் கோட்டையை பெண்கள் உருவாக்க வேண்டும் என்றாா்.

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! -மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவ... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி!

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளி... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி வங்கிக் கடன்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வழங்கினாா்

மகளிா் திட்டம் சாா்பில் 1,973 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.170 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை வழங்கினாா்.... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,202 வழக்குகளில் ரூ.48.91 கோடிக்கு சமரச தீா்வு!

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,202 வழக்குகளில் ரூ.48.91கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது. கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜி.விஜயா தல... மேலும் பார்க்க