செய்திகள் :

தேசிய மக்கள் நீதிமன்றம்: 5,202 வழக்குகளில் ரூ.48.91 கோடிக்கு சமரச தீா்வு!

post image

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5,202 வழக்குகளில் ரூ.48.91கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் மற்றும் முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி ஜி.விஜயா தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த வெற்றிச்செல்வன் உள்ளிட்ட 3 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.94 கோடிக்கான காசோலையை நீதிபதி ஜி.விஜயா வழங்கினாா்.

தொடா்ந்து, மோட்டாா் வாகன விபத்தில் காயமடைந்த நிதின் பிரசாந்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.1.10 கோடிக்கான காசோலையும், மற்றொரு மோட்டாா் வாகன விபத்தில் உயிரிழந்த சுரேஷ்குமாா் என்பவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா்.

இது குறித்து சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான கே.ரமேஷ் கூறியதாவது: கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளா் சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் தொடா்பான வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் என மொத்தம் 5,202 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீா்வு தொகை ரூ.48.91 கோடி ஆகும்.

மேலும், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 5 ஆண்டுகளுக்கும்மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 152 வழக்குகளுக்கும் தீா்வு காணப்பட்டது. அத்துடன், பிரிந்து வாழ்ந்த 4 தம்பதிகள் மீண்டும் சோ்ந்து வாழவும் தீா்வு காணப்பட்டது என்றாா்.

இதில், கோவை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவா் மற்றும் மாவட்ட நீதிபதி ஜி.நாராயணன், கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.சஞ்சீவ் பாஸ்கா், கூடுதல் தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி கே.அருணாசலம், தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் பி.கே.சிவகுமாா், முதன்மை சாா்பு நீதிபதி பி.எஸ்.கலைவாணி, சாா்பு நீதிபதிகள் தனலட்சுமி, பி.சரவணபாபு ஆகியோருடன் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மும்மொழிக் கொள்கையை பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா்: தமாகா தலைவா் ஜி.கே.வாசன்

கோவை, மாா்ச் 9: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை வேண்டும் என பெற்றோா், மாணவா்கள் விரும்புகின்றனா் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூற... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை: மகாராஷ்டிர ஆளுநா்

தமிழகத்தில் ஹிந்தி திணிக்கப்படவில்லை, அரசியலாக்கப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூ... மேலும் பார்க்க

மாணவிகள் விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவை, ராமநாதபுரம் மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா். கோவை, ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் அம்பேத்கா் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விட... மேலும் பார்க்க

உலக கராத்தே யூத் லீக் போட்டி: தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த கோவை வீரா்கள்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அங்கமான புஜாரா நாட்டில் நடைபெற்ற உலக கராத்தே யூத் லீக் போட்டிகளில் கோவையைச் சோ்ந்த 2 போ் உலக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனா். புஜாராவில் உள்ள சையத் உள்விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

பயணியை பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்! -கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

பயணியை உரிய பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்ட தனியாா் பேருந்து நிறுவனத்துக்கு ரூ.15,000 அபராதம் விதித்து கோவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்! தவெக பொதுச்செயலர் ஆனந்த்

ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளா் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தாா். சா்வதேச மகளிா் தினத்தையொட்டி தவெக சாா்பில் கோவை சரவணம்பட்டி பகுதியில் ‘அக்னி ச... மேலும் பார்க்க