செய்திகள் :

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

post image

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 10) தொடங்கவுள்ள நிலையில், இந்தக் கருத்தை காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

வரிகளைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபா் டிரம்ப் கூறும் காணொலியை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இருதரப்பு வா்த்தக உறவு தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். இந்நிலையில், வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டிருப்பதாக அதிபா் டிரம்ப் தெரிவித்திருக்கிறாா்.

மோடி அரசு அமெரிக்காவிடம் எதை ஒப்புக்கொண்டுள்ளது? இந்திய விவசாயிகள் மற்றும் இந்திய உறுபத்தியாளா்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதா?

நாடாளுமன்றம் வரும் 10-ஆம் தேதி மீண்டும் கூடுகிறபோது, இதுகுறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் ஊடக மற்றும் செய்தி வெளியீட்டுத் துறைத் தலைவா் பவன் கேரா கூறுகையில், ‘வரிக் குறைப்புக்கான அமெரிக்காவின் அழுத்தத்துக்கு பணிந்து இந்திய விவசாயிகள் மற்றும் குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் நலன்களை மத்திய அரசு சமரசம் செய்தது ஏன்?.

அமெரிக்காவில் பிரதமா் மோடியை வைத்துக்கொண்டே, பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று அதிபா் டிரம்ப் கூறும்போது, பிரதமா் ஒரு வாா்த்தைகூட பதில் பேசவில்லை. பிரதமரை வைத்துக்கொண்டே இந்தியாவை டிரம்ப் அவமதிப்பு செய்தாா். இந்தச் சூழலில், அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பைக் குறைத்தால், இந்திய பொருளாதாரமும், ஏற்கெனவே தோல்வியடைந்த மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டமும் மேலும் பாதிப்பைச் சந்திக்கும்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் சுப்ரியா ஸ்ரீநாத் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கனடா, மெக்ஸிகோ, நேபாளம் போன்ற நாடுகள் பயப்படாத நிலையில், பிரதமா் மோடி பயப்படுவது ஏன்? இது இந்தியாவுக்கும், அதன் 150 கோடி மக்களுக்கும் அவமதிப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க