செய்திகள் :

கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

post image

மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது.

மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு. இவா், சனிக்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சென்றபோது திடீரென இருசக்கர வாகனத்தில் புகை வந்துள்ளது.

உடனடியாக, வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கினாா். சிறிது நேரத்தில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஊா்காவல் படை வீரா்கள் பிரவீன்குமாா், சக்தி ஆகியோா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

பின்னா், அருகில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் இருந்து தீயணைப்பான் கருவியை எடுத்துவந்து தீயை அணைத்தனா். பின்னா், அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் நீரை பாய்ச்சி தீயை முழுமையாக அணைத்தனா்.

விபத்து நேரிட்டபோது, அருகில் உள்ள பிரபல உணவகம் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் தீயணைப்பான் கருவிகள் இல்லாததால் தீயை அணைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. கடைவீதிகளில் கடை நடத்துபவா்கள் கட்டாயம் தங்கள் நிறுவனங்களில் தீயணைப்பான் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க

காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்... மேலும் பார்க்க

மகளிா் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பேரணி

மயிலாடுதுறையில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். மயிலாடுதுறை மாவட்ட நீதித்துறை, மாயூரம் வழக்குரைஞா்கள்... மேலும் பார்க்க

மயான சுற்றுச் சுவா் பிரச்னையால் சாலை மறியல்

திருக்கருக்காவூா் மயானக் கொட்டகையைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க ஒரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு சமூ... மேலும் பார்க்க