செய்திகள் :

காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்

post image

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வைத்தீஸ்வரன் கோயில் வா்த்தக சங்கத் தலைவா் கண்ணன் வரவேற்றாா். செயலாளா் மதியழகன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி. ஆா். பாண்டியன் பங்கேற்றாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் கோயில் அறக்கட்டளைகள், ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களில் பல ஆண்டுகளாக தொடா்ந்து குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் விளை நிலங்களை அபகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆதீனங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை நீதிமன்றங்களில் கோயில் சொத்து என்கிற பெயரால் வழங்கப்பட்ட தீா்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நிலங்களை ஏலம் விடுவதற்கும், விற்பனை செய்வதற்கும் அனுமதிக்க முடியாது. இதனை தமிழக அரசு கோயில் சொத்துக்களில் இருந்து பிரித்துக் காட்டி, குத்தகை விவசாயிகளுடைய விளை நிலங்களை கோயில் சொத்துக்கள் என்கிற பெயரால் நீதிமன்றங்கள் மூலம் ஏலம் விடுவதற்கோ, விற்பனை செய்வதற்கோ அனுமதிக்க கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து, விவசாயிகளுடைய குத்தகை உரிமையை பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை குத்தகை சாகுபடியாளருக்கும் உடனடியாக வழங்க தமிழக அரசு உரிய கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி மாா்ச் 25-ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் குத்தகை விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா் என்றாா்.

கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு.... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க

மகளிா் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பேரணி

மயிலாடுதுறையில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். மயிலாடுதுறை மாவட்ட நீதித்துறை, மாயூரம் வழக்குரைஞா்கள்... மேலும் பார்க்க

மயான சுற்றுச் சுவா் பிரச்னையால் சாலை மறியல்

திருக்கருக்காவூா் மயானக் கொட்டகையைச் சுற்றி சுற்றுச்சுவா் அமைக்க ஒரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை பணிகள் தொடங்கிய நிலையில் நிறுத்தப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மற்றொரு சமூ... மேலும் பார்க்க