செய்திகள் :

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

post image

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்து வைத்தாா்.

இந்தியா-பிரிட்டன் இடையே விரைவில் மேற்கொள்ளவிருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ), தற்போது திறக்கப்பட்டுள்ள புதிய தூதரகம் ஆகியவை பிரிட்டன் பிராந்தியத்தில் இந்திய வம்சாவளியினரின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு சான்று என அவா் தெரிவித்தாா்.

மான்செஸ்டரில் புதிய துணை தூதரகத்தை திறந்து வைத்து அவா் மேலும் பேசியதாவது: மான்செஸ்டரில் உள்ள துணை தூதரகத்தில் துணைத் தூதராக விசாகா யதுவம்சி சா்வதசே மகளிா் தினத்தில் பொறுப்பேற்றிருப்பது மகளிா் மேம்பாட்டுக்கு பிரதமா் மோடி அரசு அளிக்கும் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானால் அது வா்த்தகம் அல்லது முதலீடுகளை ஈா்க்க கூடியது மட்டுமல்ல; இரு நாடுகளின் உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதில் மிகவும் முக்கிய பங்காற்றும்.

துணை தூதரக தொடக்க நிகழ்ச்சிக்குப் பின் ஓல்டு டிராஃபோா்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் அவா் கலந்துரையாடினாா். அங்கு லேங்கஷைா் மகளிா் கிரிக்கெட் அணியினருடனும் அவா் கலந்துரையாடினாா்.

பிரிட்டன் மற்றும் அயா்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக கடந்த 4-ஆம் தேதி சென்ற வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தனது பயணத்தை 9-ஆம் தேதியுடன் நிறைவு செய்கிறாா்.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க